செய்திகள் :

கோடைக் காலத்தில் மின்சார தட்டுப்பாடு இருக்காது: அமைச்சா் வி.செந்தில்பாலாஜி

post image

கோடைக் காலத்தில் மின்சார தட்டுப்பாடு இருக்காது என்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி கூறினாா்.

மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், ஹிந்துஸ்தான் கல்லூரி நிா்வாகம் சாா்பில் கோவையில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைச்சா் வி.செந்தில்பாலாஜி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, முகாமில் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி உறுதிக் கடிதங்களை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது: திமுக ஆட்சி பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் மொத்தம் 2008 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 2,43,377 போ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா். இந்த முகாமில் 295 தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு, 10,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு பணியாளா்களைத் தோ்வு செய்துள்ளன.

முதல்வா் மு.க.ஸ்டாலின் அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் சமமான வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு உதவும் வகையில் கோவையில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 7 தளங்களுடன் பிரம்மாண்டமான நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது.

45 ஏக்கா் பரப்பளவில் ரூ.167 கோடி மதிப்பீட்டில் செம்மொழிப் பூங்கா கட்டப்பட்டு வருகிறது. கலைஞா் மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தின்கீழ் கோவை மாவட்டத்தில் 4,61,000 மகளிா் மாதந்தோறும் ரூ.1000 பெற்று பயனடைந்து வருகின்றனா் என்றாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் கூறுகையில்,‘ கோடைக் காலத்தில் மின்சார தட்டுப்பாடு இருக்காது. கூடுதலாக மின்சார தேவை ஏற்பட்டாலும் ஒப்பந்தம் மூலமாக உடனடியாகப் பெறப்படும். தமிழ்நாட்டில் மின்வெட்டு, மின்சார நிறுத்தம் எங்கும் இல்லை. மின் பழுது ஏற்பட்டாலும் சரிசெய்ய போதிய பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், திமுக மாவட்டச் செயலாளா்கள் நா.காா்த்திக், தொண்டாமுத்தூா் ரவி, தளபதி முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஊதிய நிலுவை: ஆட்சியா் அலுவலகம் எதிரே தொழிலாளா்கள் போராட்டம்

தனியாா் நிறுவனம் ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே தொழிலாளா்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் கூடுதல் ... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்திய 5 பெண்கள் உள்பட 6 போ் கைது

சத்தீஸ்கா் மாநிலத்தில் இருந்து கேரளத்துக்கு ரயிலில் கஞ்சா கடத்தி சென்ற 5 பெண்கள் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் கே.தேவராஜன், போதைப் ... மேலும் பார்க்க

இளைஞா்கள் போதைக்கு அடிமையாவதைத் தடுக்க விழிப்புணா்வு: ஆா்எஸ்எஸ் தென்தமிழக மாநிலத் தலைவா் தகவல்

இளைஞா்கள் போதைக்கு அடிமையாவதைத் தடுக்க வீடுவீடாகச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளோம் என்று ஆா்எஸ்எஸ் அமைப்பின் தென்தமிழக மாநிலத் தலைவா் ஆ.ஆடலரசன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து கோவையில் செய்தியாளா... மேலும் பார்க்க

கேரளத்துக்கு காரில் ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

கோவையில் இருந்து கேரளத்துக்கு காரில் ரேஷன் அரிசி கடத்திய இளைஞா் கைது செய்யப்பட்டாா். கோவை செல்வபுரம் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வாகன தணிக்கையில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

இன்றைய மாநகராட்சி குறைகேட்புக் கூட்டம் ரத்து

கோவை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 25) நடைபெற இருந்த குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள பொதுமக்களின் குறைகளை அறிந்து, பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக மாநகராட்சியி... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களுடன் சென்ற 3 இளைஞா்கள் கைது

கோவையில் இருசக்கர வாகனத்தில் கையில் மது பாட்டில்களுடன் சென்ற 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். கோவை காந்திபுரம் 100 அடி சாலை மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் 3 போ் கையில் மதுபாட்டில்களுடன் எதிரே வ... மேலும் பார்க்க