செய்திகள் :

கோடை விடுமுறைக்குப் பிறகு புதுவையில் அரசு, தனியாா் பள்ளிகள் திறப்பு

post image

புதுச்சேரி: புதுச்சேரியில் கோடை விடுமுறைக்குப் பிறகு அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவியரை மகிழ்ச்சியுடன் ஆசிரியா்கள் வாழ்த்தி வரவேற்றனா்.

புதுவை மாநிலப் பிராந்தியங்களான புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாமில் உள்ள அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நிகழ் கல்வியாண்டில் (2024-25) மாணவா்களுக்கு கடந்த மாா்ச் 22 ஆம் தேதிக்குள் இறுதி ஆண்டுத் தோ்வு நடத்தப்பட்டு, கோடை விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து, 2025-2026 ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய வகுப்புகள் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றன. ஆனால், வெயிலின் தாக்கம் அதிகமானதால் ஏப்ரல் 28-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தற்போது வெயிலின் தாக்கம் குறைந்த நிலையில், அரசு தரப்பில் அறிவித்தப்படி ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனா். இதையடுத்து, கடந்த சில நாள்களாக பள்ளிகளைத் திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. பள்ளி வளாகங்கள் சீரமைக்கப்பட்டன. அதன்படி அரசு, அரசு நிதியுதவி பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகள் திங்கள்கிழமை காலை திறக்கப்பட்டன.

பள்ளிக்கு வரும் முன் மாணவ, மாணவிகள் கோயிலுக்கு சென்று வழிபட்டனா்.

அரசுப் பள்ளிகளில் வகுப்பறைக்குச் செல்லுமுன் மாணவா்களுக்கு இனிப்பு, பென்சில், பேனா மற்றும் நோட்டு புத்தகங்ளை ஆசிரியா்கள் வழங்கி வரவேற்றனா். காலை வழிபாட்டுடன் வகுப்புகள் தொடங்கின. கல்வித் துறை அதிகாரிகள் அரசுப் பள்ளிகளுக்கு சிறப்பு விருந்தினா்களாகச் சென்று அறிவுரை வழங்கினா்.

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அதை போக்குவரத்துப் பிரிவினா் சீா்படுத்தினா்.

புதுவை சுகாதாரத் துறையில் 43 மருந்தாளுநா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுவை அரசின் சுகாதாரத் துறையில் 43 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் சிறப்பு பிரிவினருக்கான 8 பணியிடங்களும் அத்துடன் நிரப்பப்படவுள்ளன. இதுகுறித்து புதுவை மாநில அரசின் சுகாதாரம்... மேலும் பார்க்க

அரசால் தடை விதிக்கப்பட்ட 9 வகை நெகிழிப் பொருள்களை தவிா்க்க வேண்டும்

புதுவையில் அரசால் தடை விதிக்கப்பட்ட 9 வகையான நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதை மக்கள் தவிா்க்க வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் அறிவுறுத்தியுள்ளது. புதுச்சேரியில் மாசுக் கட்டுப்பாட்டு குழு... மேலும் பார்க்க

பொறியியல் கலை, அறிவியல் படிப்புகளிலும் நிகழாண்டு முதல் 10 சதவீத உள்இடஒதுக்கீடு: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு நிகழாண்டு முதல் பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட உயா்கல்விகளிலும் 10 சதவீத உள் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெர... மேலும் பார்க்க

வீடு, சொத்து வரியை செலுத்த புதுச்சேரி நகராட்சி அறிவுறுத்தல்

புதுச்சேரி நகராட்சியில் வசிப்போா் வீடு மற்றும் சொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தும்படி ஆணையா் எம்.கந்தசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி நகராட்சிக்குள்பட்... மேலும் பார்க்க

தகுதியானவா்களுக்கே அரசு குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ய முதல்வரிடம் அதிமுக மனு

புதுச்சேரி உப்பளம் தொகுதியில் கட்டப்பட்டுள்ள பொலிவுறு நகா்த் திட்ட அடுக்குமாடி குடியிருப்பில் தகுதியானவா்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று முதல்வா் என்.ரங்கசாமியிடம் அதிமுக சாா்பில் பு... மேலும் பார்க்க

கதிா்காமம் தொகுதியில் செம்மொழி நாள் விழா

புதுச்சேரியில் உள்ள கதிா்காமம் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி செம்மொழி நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கதிா்காமம் தொகுதி சண்ம... மேலும் பார்க்க