செய்திகள் :

கோடை விடுமுறையில் வழக்குரைஞா்கள் பணிபுரிய விரும்புவதில்லை: உச்சநீதிமன்றம் சாடல்

post image

‘நிலுவை வழக்குகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும், கோடை விடுமுறையில் பணிபுரிய வழக்குரைஞா்கள் விரும்புவதில்லை’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் கவலை தெரிவித்தாா்.

உச்சநீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை விடப்படும் காலத்தில், முக்கியமான மற்றும் அவசர வழக்குகளை விசாரிக்க ஏதுவாக 2 விடுமுறைக் கால அமா்வுகளை செயல்படுத்துவது முந்தைய நடைமுறையாக இருந்தது. இந்த நிலையில், நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, உச்சநீதிமன்றத்தில் விடுமுறைக் கால அமா்வுகளின் எண்ணிக்கை 5-ஆக தற்போது உயா்த்தப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி உள்பட உச்சநீதிமன்றத்தின் 5 மூத்த நீதிபதிகள் இந்த 5 அமா்வுகளை மே மாதம் 26-ஆம் தேதி முதல் ஜூலை 13-ஆம் தேதி வரை வழிநடத்த உள்ளனா்.

இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், நீதிபதி அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை கூடியபோது, ஆஜரான ஒரு வழக்குரைஞா் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மனுவை கோடை விடுமுறைக்குப் பிறகு பட்டியலிடுமாறு கேட்டுக்கொண்டாா்.

இதனால் அதிருப்தியடைந்த தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், ‘கோடை விடுமுறையில் மூத்த 5 நீதிபதிகள் விசாரணையை தொடா்ந்து மேற்கொண்டு வரும்போதும், நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. உண்மையில், வழக்குரைஞா்கள்தான் கோடை விடுமுறையில் பணிபுரிய விரும்புவதில்லை’ என்றாா்.

புதிதாக அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையாம்! ஒரு மழைக்கே இப்படியா?

கேரள மாநிலத்தில் ஒரு சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையில், சுமார் 644 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்ட ஆறுவழி தேசிய நெடுஞ்சாலை, கடுமையாக சேதமடைந்திருப்பது, கட்டுமானப் பணிகள் குறித்து மாநில மக்களின... மேலும் பார்க்க

கோட்டா நகரில் மட்டும் நீட் மாணவர்கள் தற்கொலை அதிகம்! ஏன்? - உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

ராஜஸ்தான் கோட்டா நகரில் போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்கள் அதிகம் தற்கொலை செய்துகொள்வது பற்றி உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில்ஜேஇஇ,நீட் போன்ற நுழைவ... மேலும் பார்க்க

ஆயுதப் படையின் பலத்தைக் குறைத்து மதிப்பிடுவதை ராகுல் நிறுத்த வேண்டும்: பாஜக

இந்திய ஆயுதப்படையின் பலத்தைக் குறைத்து மதிப்பிடுவதை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நிறுத்த வேண்டும் என பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்ட... மேலும் பார்க்க

மகாராஷ்டிர-சத்தீஸ்கர் எல்லையில் 4 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

மகாராஷ்டிர-சத்தீஸ்கர் எல்லையில் 4 மாவோயிஸ்ட்களை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் மகாராஷ்டிர-சத்தீஸ்கர் எல்லையில் சுற்றிவளைத்து பாதுகாப்புப்படையினர் வெ... மேலும் பார்க்க

ஓய்வுபெறும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். ஓகா! மரபை மீறி கடைசி வேலை நாளிலும் 10 தீர்ப்பு!

உச்ச நீதிமன்றத்தின் மிக மூத்த நீதிபதிகளில் மூன்றாவது நீதிபதியாக அறியப்படும் அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா என்னும் ஏ.எஸ். ஓகா இன்றுடன் பணி ஓய்வுபெறுகிறார்.தனது கடைசி வேலை நாளான இன்றும், அவர் தான் விசாரித்து வந்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பக்கம் காங்கிரஸ்: ராகுல் மீது பாஜக விமர்சனம்!

இந்தியாவின் ஆயுதப்படையை குறைத்து மதிப்பிடக் கூடாதென ராகுல் காந்தியை பாஜக அறிவுறுத்தியுள்ளது.பயங்கரவாதம் தொடர்பான பாகிஸ்தானின் உறுதிமொழியை பிரதமர் நரேந்திர மோடி நம்பியது ஏன்? என்ற கேள்வியையடுத்து, மக்க... மேலும் பார்க்க