செய்திகள் :

பாகிஸ்தான் பக்கம் காங்கிரஸ்: ராகுல் மீது பாஜக விமர்சனம்!

post image

இந்தியாவின் ஆயுதப்படையை குறைத்து மதிப்பிடக் கூடாதென ராகுல் காந்தியை பாஜக அறிவுறுத்தியுள்ளது.

பயங்கரவாதம் தொடர்பான பாகிஸ்தானின் உறுதிமொழியை பிரதமர் நரேந்திர மோடி நம்பியது ஏன்? என்ற கேள்வியையடுத்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு கேள்வியெழுப்பிய ராகுல் காந்தி குறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா தெரிவித்ததாவது, ``இந்தியாவை வலுப்படுத்துவதில் பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பு, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான அவரின் நிலைப்பாட்டை ஒவ்வோர் இந்தியரும் உணர்ந்துள்ளனர். பாகிஸ்தானுக்குள் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தை இந்தியர்களும் பிரதமரும் கொண்டாடுகின்றனர்.

ஆனால், இந்திய ராணுவம் மீது காங்கிரஸ் கேள்வி எழுப்புகிறது. பாகிஸ்தானுடன் அவர்கள் தொடர்பில் இருப்பதுபோலத் தெரிகிறது. தேசிய விமர்சனங்களில் காங்கிரஸ் ஏன் பாகிஸ்தான் பக்கம் இருப்பதாக மக்கள் கேள்வி கேட்கின்றனர். காங்கிரஸ், நாட்டின் பெரிய கட்சியாக இருந்தாலும், பாகிஸ்தானின் கைகளில் அது ஒரு நாய்க்குட்டியாக மாறிவிட்டது.

ராகுல் காந்தி, எதிர்க்கட்சித் தலைவரா அல்லது நிஷான்-இ-பாகிஸ்தான் (பாகிஸ்தானின் தேசிய நலனுக்கான மிக உயரிய விருது) தலைவரா என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும். நமது வலிமையான மற்றும் துணிச்சலான ஆயுதப்படைகளின் அர்ப்பணிப்பை குறைத்து மதிப்பிடக் கூடாது; இனிமேலும், அவை குறித்து கேள்வி எழுப்பக் கூடாது. அவ்வாறான சந்தேகம், தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும்’’ என்று கூறினார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே 10-ஆம் தேதி சண்டை நிறுத்தம் ஏற்பட்ட பிறகு நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, பயங்கரவாதத்துக்கு ஆதரவில்லை என்ற பாகிஸ்தானின் உறுதிமொழியை இந்தியா கவனத்தில் கொண்டதாக அவா் குறிப்பிட்டிருந்தார்.

பிரதமரின் இந்த உரையைக் குறிப்பிட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ``பிரதமா் மோடி, பயங்கரவாதம் தொடா்பான பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன், அமெரிக்க அதிபா் டிரம்ப்பிடம் பணிந்ததன் மூலம் இந்தியாவின் நலன்களை தியாகம் செய்தது ஏன், கேமராக்களின் முன்னால் மட்டும் உங்களின் ரத்தம் கொதிப்பது ஏன், பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை திடீரென நிறுத்தியதன் மூலம் நாட்டின் கெளரவத்தில் சமரசம் செய்தது ஏன்? என்று கேள்வியெழுப்பினார்.

கேரளம்: பலத்த காற்றுக்கு பறந்து சாலையில் விழுந்த பெரிய இரும்பு கூரை

திருச்சூரில் பலத்த காற்றுக்கு பெரிய இரும்பு கூரை ஒன்று பறந்து சாலையில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், திருச்சூர் நகரில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது ... மேலும் பார்க்க

உ.பி.யில் மழை தொடர்பான சம்பவங்கள் 49 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 49 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மே 21-22 இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வானில் இந்திய விமானங்கள் பறப்பதற்கான தடை நீட்டிப்பு!

பாகிஸ்தான் வான்வழியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்டிருந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலினால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் பதற்றமான சூழல் நில... மேலும் பார்க்க

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களுக்கு 25% வரி? டிரம்ப் அதிரடி!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களை அமெரிக்காவில் விற்கக் கூடாதென அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களுக்கு 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்று ஆப்பிள்... மேலும் பார்க்க

43 ஆண்டுகள் கழித்து 104 வயதில் விடுதலையான ஆயுள் தண்டனைக் கைதி!

உத்தரப் பிரதேசத்தில் ஆயுள் தண்டனைப் பெற்ற கைதி ஒருவர் 43 ஆண்டுகள் கழித்து, தனது 104 வயதில் சிறையிலிருந்து விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.கௌஷம்பி மாவட்டத்தின் கௌராயி கிராமத்தைச் சேர்ந்தவர் லங்கன் (வயது 1... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு இனி அதிக நாள்கள் இல்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு!

பாகிஸ்தான் 75 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டது, இனி அதிக நாள்கள் இல்லை என உத்தரப் பிரதேச முதல்வர் பேசியுள்ளார். அயோத்தியில் ஹனுமான் கதா மண்டபத்தை இன்று (மே 23) திறந்து வைத்தபின், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ... மேலும் பார்க்க