செய்திகள் :

ஆயுதப் படையின் பலத்தைக் குறைத்து மதிப்பிடுவதை ராகுல் நிறுத்த வேண்டும்: பாஜக

post image

இந்திய ஆயுதப்படையின் பலத்தைக் குறைத்து மதிப்பிடுவதை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நிறுத்த வேண்டும் என பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா கூறுகையில்,

இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து காங்கிரஸ் தலைவரின் கருத்துகளை, இஸ்லாமாபாத் இந்தியாவை இழிவுபடுத்தப் பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தி எந்தப் பக்கம் இருக்கிறார் என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவரா அல்லது பாகிஸ்தானின் நிஷான்-இ-பாகிஸ்தானா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

பிரதமர் மோடி இந்தியாவின் கௌரவத்தைச் சமரசம் செய்ததாக ராகுல்காந்தி குற்றம் சாட்டிய நிலையில் பாஜகவின் இந்த கருத்துகள் வந்துள்ளன.

ராகுல் காந்தி நமது துணிச்சலான ஆயுதப்படையின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் குறைத்து மதிப்பிடுவதையும், கேட்கக்கூடாத கேள்விகளைக் கேட்பதையும் நிறுத்த வேண்டும், அவை தேசியப் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துகின்றன என்று பாட்டியா வலியுறுத்தினார்.

ராகுலின் இந்த கருத்துகளைச் சிறார் நடத்தை என்று நிராகரிக்க முடியாது. நமது நாட்டிற்கு விரோதமான நாடுகளின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் சென்று, வேண்டுமென்றே இதுபோன்ற கேள்விகளைக் கேட்பது ராகுல் காந்தியின் குணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.

தில்லியில் 23 கரோனா பாதிப்புகள் உறுதி! கண்காணிப்புகள் தீவிரம்!

புது தில்லியில் 23 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அம்மாநிலம் முழுவதும் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தெற்காசியாவில் மீண்டும் கரோனா தொற்று பரவி ... மேலும் பார்க்க

உத்தரகண்டில் முதல் எஃப்எம் வானொலி நிலையம் அறிமுகம்

உத்தரகண்டின் பித்தோராகர் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தால் இயக்கப்படும் முதல் எஃப்எம் வானொலி நிலையம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை ராணுவத்தின் மத்திய கட்டளையின் பொது அதிகாரி அனிந்தியா சென்குப்தா தொடங... மேலும் பார்க்க

வேகமெடுக்கும் கரோனா பரவல்?ஹரியாணாவில் புதியதாக 4 பேருக்கு பாதிப்பு!

ஹரியாணா மாநிலத்தில் புதியதாக 4 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. ஹரியாணாவின் குருகிராமம் மற்றும் ஃபரிதாபாத் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர் என மொத்தம் 4 பேருக்கு கரோனா தொற்று ஏற்றுபட... மேலும் பார்க்க

கேரளம்: பலத்த காற்றுக்கு பறந்து சாலையில் விழுந்த பெரிய இரும்பு கூரை

திருச்சூரில் பலத்த காற்றுக்கு பெரிய இரும்பு கூரை ஒன்று பறந்து சாலையில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், திருச்சூர் நகரில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது ... மேலும் பார்க்க

உ.பி.யில் மழை தொடர்பான சம்பவங்கள் 49 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 49 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மே 21-22 இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வானில் இந்திய விமானங்கள் பறப்பதற்கான தடை நீட்டிப்பு!

பாகிஸ்தான் வான்வழியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்டிருந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலினால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் பதற்றமான சூழல் நில... மேலும் பார்க்க