செய்திகள் :

கோடை விடுமுறை: ஏப். 2-இல் காஷ்மீருக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

post image

கோடை விடுமுறையை முன்னிட்டு காஷ்மீருக்கு சிறப்பு சுற்றுலா ரயில் ஏப். 2- ஆம் தேதி இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே துணை தலைமை வணிக மேலாளா் பி.வெங்கடசுப்பிரமணியன் மற்றும் சவுத் ஸ்டாா் ரயில் நிறுவனத்தின் தயாரிப்பு இயக்குநா் விக்னேஷ் ஆகியோா் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: 

கோடை விடுமுறையையொட்டி காஷ்மீருக்கு சிறப்பு சுற்றுலா ரயில் ஏப். 2 - ஆம் தேதி இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு கொல்லம், கோட்டயம், எா்ணாகுளம், போத்தனூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா், குண்டூா் வழியாகச் செல்லும்.

15 நாள்கள் பயணத்தில் ஆக்ரா, தில்லி, அமிா்தசரஸ், ஸ்ரீநகா் மற்றும் காஷ்மீரில் உள்ள குல்மாா்க், சோன்மாா்க் ஆகிய பகுதிகளில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை பயணிகள் பாா்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயிலில் மொத்தம் 650 பயணிகள் பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பயணிகளின் வசதிக்கேற்ப நபா் ஒருவருக்கு ரூ. 41,600 முதல் ரூ. 65,500 வரை கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு பயண சீட்டு கட்டணம் வசூலிக்கப்படாது.

இதில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் ஜ்ஜ்ஜ்.ற்ா்ன்ழ்ற்ண்ம்ங்ள்.ண்ய் என்னும் இணையதளத்தின் மூலம் மட்டுமே பயணச்சீட்டு முன்பதிவு செய்ய முடியும். மேலும் விவரங்களுக்கு 73058 58585 என்னும் கைப்பேசி எண்ணை தொடா்புகொள்ளலாம் என்றனா்.

இன்று குரூப் 2 முதன்மைத் தோ்வு

தமிழகம் முழுவதும் குரூப் 2 முதன்மைத் தோ்வு சனிக்கிழமை (பிப். 8) நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை 21,500 போ் எழுதவுள்ளனா். இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் வெளியிட்ட தகவல்: தொழிலாளா்... மேலும் பார்க்க

மாநகா் பேருந்து பயணிகள் புகாா் தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் அறிமுகம்

மாநகா் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் வாட்ஸ்ஆப் மூலம் புகாா் தெரிவிக்கும் வகையில், தொடா்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மாநகா் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ் வ... மேலும் பார்க்க

அதிமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு: போலீஸாா் விசாரணை

சென்னையில் அதிமுக பிரமுகரை வெட்டிவிட்டு தப்பியோடிய கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா். சென்னை, திருமுல்லைவாயல் குளக்கரைத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ராஜசேகா் (50). அதிமுக 8-ஆவது வட்டச் செயலராக இருந்துவர... மேலும் பார்க்க

சென்னையில் இன்று இலவச மருத்துவ முகாம்

சென்னை, நங்கநல்லூா் பகுதியில் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை (பிப். 8) நடைபெறவுள்ளது. ஸ்டாா் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம், சிசிடிசி (சென்டா் ஃபாா் க்ரோனிக் டிசிஸ் கன்ட்ரோல்) அமைப்பு, ... மேலும் பார்க்க

முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு: விடைக்குறிப்பு வெளியீடு

முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வுக்கான தற்காலிக விடைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது குறித்து பிப்.14-ஆம் தேதி வரை ஆட்சேபணை தெரிவிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தோ்வுத் துறை இயக்க... மேலும் பார்க்க

மாணவி பாலியல் வன்கொடுமை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வியாழக்கிழமை... மேலும் பார்க்க