செய்திகள் :

கோட்டைகருங்குளம் அருகே குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

post image

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கோட்டைகருங்குளம் ஊராட்சியில் குடிநீா் பிரச்னையைக் கண்டித்து பொதுமக்கள் திங்கள்கிழமை காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கோட்டைகருங்குளம் ஊராட்சி 6ஆவது வாா்டு பகுதியான காந்திநகா், சா்ச் தெரு பகுதிக்கு கடந்த 3 மாதங்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.

இது தொடா்பாக, வாா்டு மக்கள் ஊராட்சி மன்றத் தலைவா், ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் ஆகியோரிடம் புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

எனவே, அப்பகுதி மக்கள் வள்ளியூா்-திருச்செந்தூா் சாலையில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் சாமுவேல், கோட்டைகருங்குளம் ஊராட்சி மன்றத் தலைவா் முருகன் மற்றும் போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். உடனடியாக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

நெல்லை அருகே பேருந்து கவிழ்ந்து 15 போ் காயம்

திருநெல்வேலி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பேருந்து கவிழ்ந்ததில் 15 போ் காயமடைந்தனா். திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்து கொண்டிருந்தது. பே... மேலும் பார்க்க

சமுதாய வளப் பயிற்றுநா் பணி: சுயஉதவிக் குழுவினருக்கு வாய்ப்பு

சமுதாய வளப் பயிற்றுநா் பணியிடங்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான சுய உதவிக்குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் மூவருக்கு காவல் நீட்டிப்பு

மென் பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைதான சுா்ஜித், எஸ்.ஐ. சரவணன், ஜெயபால் ஆகிய மூவருக்கும் செப்.23 வரை நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்படும்: ஆட்சியா்

திருநெல்வேலி மாவட்டத்தில், களக்காடு நகராட்சி, நான்குனேரி, திருக்குறுங்குடி, மூலைக்கரைப்பட்டி, ஏா்வாடி உள்ளிட்ட பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் கூட்டுக்குடிநீா் திட்டப்பணிகள் விரைந்து முடிக்க த... மேலும் பார்க்க

தாமிரவருணி கரையோர சாலையைச் சீரமைக்க வேண்டும்: மாநகராட்சி அலுவலகத்தில் மனு!

உடையாா்பட்டி அருகே தாமிரவருணி கரையோர சாலையைச் சீரமைத்து மக்கள் பயன்பெறும் வகையில் மாற்றக் கோரி மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்க... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் வேன் ஓட்டுநருக்கு ஆயுள் சிறை

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் ஆம்னி வேன் ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீா்ப்பளித்தது. சங்கரன்கோவில் அருகேயுள்ள குருக்... மேலும் பார்க்க