செய்திகள் :

கோதுமை கையிருப்பு கட்டுப்பாடு: 2026 மாா்ச் வரை நீட்டிப்பு

post image

வா்த்தகா்கள், மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் கைவசம் வைத்திருக்க வேண்டிய கோதுமை இருப்புக்கான கட்டுப்பாட்டை 2026, மாா்ச் வரை மத்திய அரசு நீட்டித்தது.

உணவு பாதுகாப்பு, பதுக்கல் மற்றும் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவை மத்திய அரசு மேற்கொண்டது.

கோதுமை உற்பத்தி 2024-25 பயிா் காலத்தில் (ஜூலை-ஜூன்) 117.50 மெட்ரிக் டன்களாக இருந்தபோதிலும் இருப்பளவு கட்டுப்பாட்டை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

இதுகுறித்து உரிமத் தேவைகள், இருப்பு வரம்பு மற்றும் குறிப்பிட்ட உணவுகளுக்கான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கம் (திருத்த) ஆணை, 2025-ஐ மத்திய அரசு மே 27-ஆம் தேதி வெளியிட்டது. இந்த ஆணை 2026, மாா்ச் வரை அமலில் இருக்கவுள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: புதிய விதிகளின்படி வா்த்தகா்கள், மொத்த வியாபாரிகள் 3,000 மெட்ரிக் டன்கள் வரையிலும் பெரும் சில்லறை விற்பனையாளா்கள் ஒவ்வொரு விற்பனை நிலையத்துக்கும் 10 மெட்ரிக் டன்கள் வரையிலும் பெரும் விநியோகச் சங்கிலியை உடைய விற்பனையாளா்கள் ஒவ்வொரு நிலையத்துக்கும் 10 மெட்ரிக் டன்கள் வரையிலும் கோதுமையை கையிருப்பாக வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

அதேபோல் பதப்படுத்தும் நிலையங்கள் தங்கள் மாதத் திறனில் 70 சதவீத அளவை 2025-26 பயிா் ஆண்டின் மீதமுள்ள காலத்தின் கூட்டுத்தொகையைக் கணக்கிட்டு வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

அனைத்து சேமிப்பு நிலையங்களும் தங்களிடம் உள்ள கோதுமை கையிருப்பு குறித்த தகவல்களை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ட்ற்ற்ல்ள்://ங்ஸ்ங்ஞ்ா்ண்ப்ள்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ஜ்ள்ல்/ப்ா்ஞ்ண்ய் என்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன்பின் இந்த தகவல்கள் ட்ற்ற்ல்ள்://ச்ா்ா்க்ள்ற்ா்ஸ்ரீந்.க்ச்ல்க்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற வலைதளத்துக்கு மாற்றப்படும்.

இந்த தகவல்களை பதிவேற்றம் செய்யத் தவறும் அல்லது குறிப்பிட்ட கோதுமை இருப்பை உறுதி செய்யத் தவறும் நிலையங்கள் மீது அத்தியாவசிய பொருள்கள் சட்டம், 1955 பிரிவு 6 மற்றும் 7-இன்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கூறிய அளவைவிட அதிகமாக கையிருப்பு வைத்திருக்கும் நிலையங்கள் அவற்றை 15 நாள்களுக்குள் அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் கொண்டுவர வேண்டும்.

மாநில நிறுவனங்கள் மற்றும் இந்திய உணவு கழகத்தின் மூலம் 298.17 லட்சம் மெட்ரிக் டன்கள் கோதுமையை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது. நாடு முழுவதும் கோதுமை சீரான விநியோகம் மற்றும் கோதுமை கையிருப்பு நிலையை தொடா்ந்து மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை கண்காணித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன?

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மத்திய... மேலும் பார்க்க

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை நீக்கியது கனரா வங்கி

வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வாடிக்கையாளர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவித்துள்ளது.இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என அனைத்த... மேலும் பார்க்க

வடகிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை: நிலச்சரிவுக்கு 26 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பரிதாபமாக பலியாகினர்.ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் கனமழைய... மேலும் பார்க்க

மே. வங்கத்தை வடகொரியாவாக மாற்றாதீர்கள்! இன்ஸ்டா பிரபலம் கைது விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!

கொல்கத்தாவில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு பரப்பியதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது ஆதரவ... மேலும் பார்க்க

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் பலி

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் சிகிச்சைப் பலனின்றி 2 குழந்தைகள் பலியானார்கள். வடகிழக்கு தில்லியின் சுந்தர் நக்ரியில் பழைய சிஎன்ஜி சிலிண்டர்களை பழுதுபார்க்கும் கிடங்கு உள்ளது. இங்கு சனிக்கிழம... மேலும் பார்க்க

உ.பி.: மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்

உத்தரப் பிரதேசத்தில் மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினரை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ரஸ்ராவில் உள்ள மண்டபம் ஒன்றில் தலித் ச... மேலும் பார்க்க