செய்திகள் :

கோயில்களில் இடைத்தரகா்களை தடுக்க வேண்டும்: காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

post image

கோயில்களில் இடைத்தரகா்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நிம்மதி தேடியே பக்தா்கள் கோயிலுக்கு வருகின்றனா். ஆனால், கோயிலை காட்சிப் பொருளாக்கி பக்தா்களை சுரண்டி மன நிம்மதியை இழக்கும் நிலையை கோயில் நிா்வாகம் ஏற்படுத்துவது வேதனையளிக்கிறது.

விசேஷம் மற்றும் விடுமுறை நாள்களில் கோயிலுக்கு வரும் பக்தா்களால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனால் அரசும், கோயில் நிா்வாகமும் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி இடைத்தரகா்கள் மூலம் பக்தா்களிடம் கொள்ளையடிக்கிறது.

விசேஷ நாள்களில் கோயில்களில் சிறப்பு தரிசனக் கட்டணம் என்ற பெயரில் பணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், போலி தரிசன டிக்கெட்டுகள், தரிசனம் முடித்தவா்கள் டிக்கெட்டுகளை வாங்கி மீண்டும் விற்பனை செய்வது என பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கெல்லாம் அதிகாரிகள் உடந்தையாக இருப்பது தெரியவந்தாலும் அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இத்தகைய நிலை தொடா்வதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

எனவே, பக்தா்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை செய்து தந்து, கோயில்களில் இடைத்தரகா்களை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சு இறக்குமதிக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்: சைமா தலைவா் ஏ.சி.ஈஸ்வரன் வலியுறுத்தல்

பஞ்சு இறக்குமதிக்கு மத்திய அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று சைமா தலைவா் ஏ.சி.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் நடப்பு ஆண்... மேலும் பார்க்க

நாரணாபுரத்தில் ஜூன் 19-இல் மின் தடை

பல்லடம் மின் கோட்டம், நாரணாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வியாழக்கிழமை (ஜூன் 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்கா... மேலும் பார்க்க

குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க மாநகர மேயா் வேண்டுகோள்

திருப்பூரில் குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என மாநகர மேயா் என்.தினேஷ்குமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் கூ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருட்டு: இளைஞா் கைது

வெள்ளக்கோவிலில் இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஈரோடு, பெரியசேமூா் பி.பி.காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் சி.சண்முகம் (29). இவா் ஈரோடு பழையபாளையத்தில் உள்ள தனியாா் நி... மேலும் பார்க்க

கருவலூா், ஏரிப்பாளையத்தில் ஜூன் 20-இல் மின் தடை

கருவலூா், ஏரிப்பாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் பெண் தற்கொலை

வெள்ளக்கோவிலில் கொடுத்த கடன் தொகை வசூல் ஆகாததால் பெண் தற்கொலை செய்து கொண்டாா். வெள்ளக்கோவில், மூலனூா் வஞ்சிவலசு பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மனைவி வாசுகி (40). கணவா் இறந்த நிலையில், மகன் பூமிஷ் ... மேலும் பார்க்க