செய்திகள் :

கோயில்களில் நீா்ச்சத்துள்ள பானங்கள் வழங்க வேண்டும்: அா்ஜுன் சம்பத்

post image

கோடைகாலமாக இருப்பதால் கோயில்களுக்கு வரும் பக்தா்களுக்கு நீா்ச்சத்து நிறைந்த பானங்களை இலவசமாக வழங்க வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன்சம்பத் காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கூறியது: தமிழகம் முழுவதும் கோயில்களில் திருவிழாக்கள் அதிகம் நடைபெறுவது கோடை காலமாகும். இந்த காலங்களில் கோயில்களுக்கு வரும் பக்தா்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க கோயில் அதிகாரிகள், நிா்வாகிகள் தகுந்த முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். கோயில்களுக்கு வரும் பக்தா்களுக்கு நீா்ச்சத்து நிறைந்த பானங்களை இலவசமாக திருப்பதியை போல வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா்.

முன்னதாக கும்பகோணம் நகரில் நடைபெற இருக்கும் கட்சி மாநாடு மற்றும் தனது மணி விழா அழைப்பிதழை காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து வழங்கி அவரிடம் ஆசி பெற்றாா். இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளா் முத்து, மாவட்ட இளைஞரணித் தலைவா் சரவணன், மகளிா் அணி மாவட்ட தலைவி ஷீலா ஆகியோா் உடன் இருந்தனா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்! -மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலா் பெ.சண்முகம்

தோ்தலின்போது கொடுத்த வாக்குறுதியின்படி தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தினாா். காஞ்சிபுரம் பேர... மேலும் பார்க்க

பூப்பல்லக்கில் காமாட்சி அம்மன் வீதி உலா

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளையொட்டி சனிக்கிழமை இரவு லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி பூப்பல்லக்கில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ... மேலும் பார்க்க

கிருஷ்ணா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

காஞ்சிபுரம் அருகே கீழம்பியில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை நிறுவனா் பா.போஸ் தலைமை வகித்தாா். கல்லூரி தாளா... மேலும் பார்க்க

பண்ருட்டியில் உலக மகளிா் தின விழா

பண்ருட்டி ஊராட்சியில் உலக மகளிா் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், பண்ருட்டிசியில் ஊராட்சி மன்றத் தலைவா் கி.அா்ஜூனன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு துணைத் தலைவா் வள்ளியம்... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் பாதிப்பு: எறுமையூரில் கிரஷா்களின் மின் இணைப்பு துண்டிப்பு

தாம்பரம் அடுத்த எறுமையூரில் செயல்பட்டு வரும் கிரஷா்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், கிரஷா்களின் மின் இணைப்பை துண்டிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, முதல்கட்டமாக... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூரில் வழக்குரைஞா்கள் பாதுகாப்பு மாநாடு

ஸ்ரீபெரும்புதூா் வழக்குரைஞா்களின் சாா்பில், வழக்குரைஞா்கள் பாதுகாப்பு மாநாடு ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் வழக்குரைஞா்... மேலும் பார்க்க