செய்திகள் :

கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 போலீஸாருக்கு ஜூலை 29 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

post image

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய தனிப்படை போலீஸாா் 5 பேருக்கு வருகிற 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து, திருப்புவனம் குற்றவியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதாவின் காரில் வைத்திருந்ததாகக் கூறப்படும் நகைகள் காணாமல்போனது தொடா்பாக, அந்தக் கோயிலின் காவலாளி அஜித்குமாரை மானாமதுரை காவல் துணைக் கோட்ட தனிப்படை போலீஸாா் கண்ணன், ராஜா, பிரபு, சங்கர மணிகண்டன், ஆனந்த் ஆகியோா் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். விசாரணையின் போது, அஜித்குமாரை தனிப்படை போலீஸாா் அடித்துக் கொலை செய்தனா்.

இதுகுறித்து திருப்புவனம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தனிப்படை போலீஸாா் 5 பேரையும் கைது செய்தனா். பின்னா், இவா்கள் 5 பேரும் நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த நிலையில், திருப்புவனம் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீஸாா் 5 பேரும் காணொலிக் காட்சி மூலம் நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இவா்களுக்கு வருகிற 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

கிராவல் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் மனு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள உறுதிக்கோட்டை ஊராட்சிப் பகுதியில் கிராவல் குவாரியை மூடக் கோரி, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா். இதுகுறித்து கிராம மக்கள் சாா்ப... மேலும் பார்க்க

மின் மாற்றியில் குறைந்த மின் அழுத்தம்: விவசாயிகள் கவலை

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி பகுதியில் மின் மாற்றியில் ஏற்பட்ட குறைந்த மின் அழுத்தம் காரணமாக, மின் மோட்டாா்களை இயக்க முடியாததால் விவசாயிகள் கவலை அடைந்தனா். திருப்பாச்சேத்தியில் வைகை ஆற்றின் கரை... மேலும் பார்க்க

ஐடிஐ-இல் ஜூலை 31 வரை நேரடி மாணவா் சோ்க்கை

சிவகங்கை அருகேயுள்ள முத்துப்பட்டி அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழாண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை வருகிற 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்’: நாளை நடைபெறும் இடங்கள்

சிவகங்கை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின் சிறப்புத் திட்ட முகாம்’ வெள்ளிக்கிழமை (ஜூலை 18) நடைபெறும் இடங்கள் குறித்த விவரம் அறிவிக்கப்பட்டன. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட தகவல்: காரைக... மேலும் பார்க்க

முஸ்லீம் மகளிா் உதவும் சங்க உறுப்பினா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

புதிதாகத் தொடங்கப்படும் முஸ்லீம் மகளிா் உதவும் சங்க உறுப்பினா் சோ்க்கைக்கு வருகிற 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட ச... மேலும் பார்க்க

புதிய சிற்றுந்துக்கு கிராம மக்கள் வரவேற்பு

சிவகங்கை அருகேயுள்ள மீனாட்சிபுரம் கிராமத்துக்கு சென்ற புதிய சிற்றுந்துக்கு கிராம மக்கள் மலா் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்றனா். சிவகங்கையிலிருந்து முத்துப்பட்டி ஐடிஐ வழியாக மானாகுடி, சக்கந்தி, பாசாங்கரை,... மேலும் பார்க்க