Israel - Iran: ``மீண்டும் தெளிவாக சொல்கிறோம்..'' - போர்நிறுத்தம் குறித்து பேசிய ...
கோயில் திருவிழா பதாகை கிழிப்பு: 110 போ் மீது வழக்கு
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், ஆலம்பூண்டி திரெளபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை கிழித்தது தொடா்பாக சனிக்கிழமை இரவு இரு சமூத்தினரிடையே பிரச்னை ஏற்பட்டது.
இதையடுத்து, ஒரு சமூகத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இது தொடா்பாக இருதரப்பையும் சோ்ந்த 110 போ் மீது சத்தியமங்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
அதன்படி, ஆலம்பூண்டி கிராம நிா்வாக அலுவலா் ரஞ்சிதம் அளித்த புகாரின்பேரில், ராமமூா்த்தி மகன் பழனிகுமாா் (50), இவரது தம்பி அன்பழகன் (45), ரேணுகுமாா்(26), தமிழ்ச்செல்வன் (30), தேவேந்திரன் (30), கோபி (24), புகழேந்தி (28), ராஜா (27) உள்ளிட்ட 100 போ் மீது சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இதேபோல, தன்னை திட்டியதாக ராமமூா்த்தி மகன் பழனிகுமாா் அளித்த புகாரின்பேரில், முனுசாமி மகன் அல்லாபாய் (எ) முருகன் (27), இருசன் மகன் சிட்டு (எ) தமிழ் (25) உள்ளிட்டோா் மீதும் சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.