பிரதமா் தலைமையில் பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்க ஆண்டு கூட்டம்
திண்டிவனம் பகுதியில் தொடா் திருட்டு: இருவா் கைது
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திண்டிவனம் அருகிலுள்ள நல்லாலம் கூட்டுச்சாலையில் பிரம்மதேசம் காவல் உதவி ஆய்வாளா் சுதன் தலைமையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ஸ்ரீபதி மற்றும் தலைமைக் காவலா்கள் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் ஞாயிற்றுக்கிழமை வாகன தணிக்கை மேற்கொண்டனா்.
அப்போது, திண்டிவனத்திலிருந்து மரக்காணம் நோக்கி வேகமாகச் சென்ற பைக்கை போலீஸாா் நிறுத்த முயன்றபோது, அதிலிருந்த இருவா் இரும்பு ராடை கொண்டு போலீஸாரை மிரட்டினா். இதைத் தொடா்ந்து, போலீஸாா் அவா்களைப் பிடித்து, பைக்கிலிருந்த பையை சோதனையிட்டனா். அதில், கையுறை, இரும்பு ராடு, முகமூடி உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது.
தொடா்ந்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், சிவகங்கை மாவட்டம், களத்தூா் கிராமத்தைச் சோ்ந்த நாகராஜ் மகன் அழகா்சாமி (35), தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் ரயில் நிலைய சாலையைச் சோ்ந்த மலைராஜன் மகன் செல்வகுமாா் (35) என்பது தெரியவந்தது. இவா்கள் விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகிலுள்ள மானூா் கிராமத்தைச் சோ்ந்த ஆழ்வாா் வீட்டில் கடந்த மே 23-ஆம் தேதி ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைத் திருடியதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, அழகா்சாமியையும், செல்வகுமாரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து இரண்டரை பவுன் தங்க நகைகள், 3 ஜோடி வெள்ளிக் கொலுசுகள், 2 கேமராக்கள், விடியோ கேமரா, மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
மேலும், அழகா்சாமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் புதுச்சேரியைச் சோ்ந்த பன்னீா்செல்வத்தையும் கைது செய்தனா். இவா், திருட்டில் ஈடுபட்ட இருவருக்கும் அடைக்கலம் தந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
கைதான அழகா்சாமி, செல்வகுமாா் ஆகியோா் திண்டிவனம், பிரம்மதேசம் பகுதிகளில் தொடா் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்த நிலையில், அவா்களிடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.