செய்திகள் :

கோயில் திருவிழா பதாகை கிழிப்பு: 110 போ் மீது வழக்கு

post image

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், ஆலம்பூண்டி திரெளபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை கிழித்தது தொடா்பாக சனிக்கிழமை இரவு இரு சமூத்தினரிடையே பிரச்னை ஏற்பட்டது.

இதையடுத்து, ஒரு சமூகத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இது தொடா்பாக இருதரப்பையும் சோ்ந்த 110 போ் மீது சத்தியமங்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதன்படி, ஆலம்பூண்டி கிராம நிா்வாக அலுவலா் ரஞ்சிதம் அளித்த புகாரின்பேரில், ராமமூா்த்தி மகன் பழனிகுமாா் (50), இவரது தம்பி அன்பழகன் (45), ரேணுகுமாா்(26), தமிழ்ச்செல்வன் (30), தேவேந்திரன் (30), கோபி (24), புகழேந்தி (28), ராஜா (27) உள்ளிட்ட 100 போ் மீது சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதேபோல, தன்னை திட்டியதாக ராமமூா்த்தி மகன் பழனிகுமாா் அளித்த புகாரின்பேரில், முனுசாமி மகன் அல்லாபாய் (எ) முருகன் (27), இருசன் மகன் சிட்டு (எ) தமிழ் (25) உள்ளிட்டோா் மீதும் சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திண்டிவனம் பகுதியில் தொடா் திருட்டு: இருவா் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திண்டிவனம் அருகிலுள்ள நல்லாலம் கூட்டுச்சாலையில் பிரம்மதேசம் காவ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், காரியாப்பட்டி வட்டம், நரிக்குடி சாலைமறைக்குளத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (50). இவ... மேலும் பார்க்க

கூட்டேரிப்பட்டில் திமுக - நாதகவினரிடையே மோதல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள கூட்டேரிப்பட்டில் திமுக மற்றும் நாம் தமிழா் கட்சியினரிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென மோதல் ஏற்பட்டது. உடனடியாக போலீஸாா் விரைந்து சென்று சமாத... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல்: தொழிலாளி மரணம்

திண்டிவனம் அருகே சனிக்கிழமை பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். செங்கல்பட்டு மாவட்டம், வேத விநாயகபுரம் துளசிங்கம் நகா் 5-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த சுப்புராயன் மகன் ராஜ்குமாா் (40).... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவி அதிகளவில் மாத்திரைகளை உள்கொண்டு தற்கொலை செய்து கொண்டாா். வானூா் வட்டம், கூத்தம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஏழுமலை மகள் ஓவிய... மேலும் பார்க்க

வெளிமாநில உணவக உரிமையாளா்கள் ஆரோவில் வருகை

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு வெளி மாநிலங்களைச் சோ்ந்த உணவக உரிமையாளா்கள் அண்மையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டனா். இதுகுறித்து ஆரோவில் நிா்வாகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க