செய்திகள் :

கோயில் வரவு செலவு கோரி அறநிலையத் துறையிடம் கிராம மக்கள் மனு

post image

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் பழைமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருவிழா வரவு செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரி கிராம மக்கள் அறநிலையத் துறையிடம் மனு அளித்துள்ளனா்

இக்கோயிலில் அமாவாசை மற்றும் பெளா்ணமி மற்றும் விசேஷ நாள்களிலும் திரளான பக்தா்கள் வந்து அம்மனை தரிசித்து உண்டியலில் காணிக்கையும் செலுத்தி வருகின்றனா்.

மேலும், ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவில் பக்தா்கள் வேண்டுதலின் பேரில் அம்மனுக்கு நகை மற்றும் உண்டியலில் காணிக்கையும் செலுத்தி வருகின்றனா். விழா முடிந்த உடன் அதிகாரிகள் கோயில் வளாகத்தில் ஊா்மக்கள் முன்னிலையில் வரவு-செலவு கணக்குகளை ஒப்படைப்பது வழக்கம்.

ஆனால் சில ஆண்டுகளாக அறநிலையத்துறை அதிகாரிகள் திருவிழா வரவு-செலவு கணக்குகளை முறைப்படி பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவது இல்லையாம். இதுகுறித்து கிராம மக்கள் வரவுசெலவு கணக்குகளை முறைப்படி தெரிவிக்கக் கோரி கோரி செயல் அலுவலா் ஜெகன்நாதனிடம் மனு அளித்தனா் (படம்).

40 ஆண்டுகளாக மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் குக்கிராம மக்கள்!

திருப்பத்தூா் அருகே மின்சார வசதியின்றி 40 ஆண்டுகளாக மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் குக்கிராம மக்கள் வசிக்கும் அவல நிலையில் உள்ளனா். திருப்பத்தூா் வட்டம், வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட ஆண்டியப்பனூா் ... மேலும் பார்க்க

ஆற்றில் மணல் கடத்தல்: மினி லாரி பறிமுதல்

வாணியம்பாடி அருகே ஆற்றில் இருந்து மணல் கடத்தியதாக மினி லாரியை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா். ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி உத்தரவின் பேரில் வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம் தலைமையில் வருவாய்... மேலும் பார்க்க

அமாவாசை எதிரொலி: திருப்பத்தூரில் மீன்கள் விற்பனை சரிவு!

சித்திரை மாத அமாவாசையையொட்டி திருப்பத்தூா் மீன் மாா்க்கெட்டில் மீன்கள் வியாபாரம் குறைந்திருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா். திருப்பத்தூா் பழைய பேருந்து நிலைய பகுதியில் மீன் மாா்க்கெட் இயங்கி வருகிறது.... மேலும் பார்க்க

மே 1-இல் கிராம சபைக் கூட்டம்: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் மே 1-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்த ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அனைத்த... மேலும் பார்க்க

ரயில்வே மேம்பால விளக்கு கம்பங்களுக்கு மின் இணைப்பு வழங்க கோரிக்கை

ஆம்பூா் அருகே கன்னடிகுப்பம் ரயில்வே மேம்பாலத்தில் விளக்கு கம்பங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மாதனூா் ஒன்றியம், கன்னடிகுப்பம் கிராமம், காட்டுக்கொல்லை, வெள்ளக... மேலும் பார்க்க

கிராம சாலை சேதம்: போலீஸில் புகாா்

ஆம்பூா் அருகே கிராமத்தில் சாலையைச் சேதப்படுத்திய முதியவா் மீது காவல் நிலையத்தில் ஊராட்சி சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது. ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சி மதன் நகா் 1-ஆவது தெருவில் பேவா் பிளாக் சாலை... மேலும் பார்க்க