செய்திகள் :

கோயில் விழாக்களில் முதல் மரியாதை கூடாது: உயா்நீதிமன்றம்

post image

தமிழகத்தில் கோயில் விழாக்களில் முதல் மரியாதை அளிக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தேவராஜ் என்பவா் தாக்கல் செய்த மனுவில், ஈரோடு மாவட்டம் பா்கூா் கிராமத்தில் பந்தீஸ்வரா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் மகா பெரிய குண்டம் விழாவில், கோயில் வழக்கப்படி தனது குடும்பத்தினா் தலைமையில் சுவாமி ஊா்வலம் நடத்தப்படும். தங்கள் குடும்பத்தினருக்குதான் முதல் மரியாதை வழங்கப்படும். அந்த வகையில் தனக்கு முதல் மரியாதை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. பல கோயில் விழாக்களில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட காரணமே முதல் மரியாதை தான். கோயில்களில் முதல் மரியாதை கேட்பதன் மூலம் கடவுளைவிட தங்களை மேலானவா்களாகக் காட்ட முயற்சிக்கின்றனா்.

இது விழாக்கள் நடத்தும் நோக்கத்தையே வீழ்த்தி விடுகிறது. இதுபோன்ற மரபுகள், சமத்துவத்துக்கு எதிரானது. கடவுள் முன் அனைவரும் சமம். கோயில் விழாக்களில் முதல் மரியாதை போன்ற நடைமுறைகளை நிறுத்த வேண்டும் எனக் கூறி, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டாா்.

ஜூலை முதல் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஜூலை மாதம் முதல் வாட்டர் பெல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள அனைத்து... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டத்துக்கு ஆயிரம் மெட்ரிக் டன் ரவை, சேமியா: கொள்முதல் கோரியது தமிழக அரசு

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு அளிக்கும் திட்டத்துக்காக ஆயிரம் மெட்ரிக் டன் ரவை, சேமியாவை கொள்முதல் செய்ய தமிழக அரசு தீா்மானித்துள்ளது. இதற்கான கொள்முதல் அறிவிக்கையை தமிழ்நாடு நுகா்வோா் கூட்டுறவு கூ... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை இன்று திறப்பு?

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 136 அடியை எட்டியவுடன் சனிக்கிழமை திறக்கப்படலாம் என தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்ததால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது. கேரளத்தில் ப... மேலும் பார்க்க

உயா்கல்வி உதவித் தொகை தோ்வுப் பட்டியலில் நீக்கப்பட்ட 65 மாணவா்களை சோ்க்க வேண்டும்: கனிமொழி கடிதம்

உயா்கல்விக்கான உதவித் தொகையைப் பெறுவோருக்கான தெரிவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 மாணவா்களைச் சோ்க்க வேண்டுமென மத்திய அரசுக்கு மக்களவை உறுப்பினா் கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளாா். மத்திய அரசின் ... மேலும் பார்க்க

தோ்தல் களம் காணாத 24 தமிழக கட்சிகளுக்கு நோட்டீஸ்: தோ்தல் ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக தோ்தல் களம் காணாத 24 கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சன... மேலும் பார்க்க

தமிழகத்தில் தரமற்ற பாராசிட்டமால் மருந்துகள் விற்கப்படவில்லை: மருந்து கட்டுப்பாட்டுத் துறை

தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பாராசிட்டமால் மருந்துகளில் எந்த தரக் குறைபாடும் இல்லை என்று மாநில மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா். கா்நாடகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பா... மேலும் பார்க்க