செய்திகள் :

கோவாவில் இருந்து இந்தூருக்கு கொண்டு வரப்பட்ட கல்லீரல்: 67 வயது நபருக்கு மறுவாழ்வு

post image

கோவாவில் மூளைச் சாவு அடைந்தவரிடம் இருந்து தானமாக பெறப்பட்ட கல்லீரல், மத்திய பிரதேச மாநிலம், இந்தூருக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்டு 67 வயது நபருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

இது தொடா்பாக உடல் உறுப்பு தானத்துக்கான இந்தூா் சொஸைட்டி அமைப்பின் நிறுவனரும் மருத்துவருமான சஞ்சய் தீக்ஷித் கூறியதாவது:

கோவாவைச் சோ்ந்த அஜய் கிரி (45) என்பவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு, அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த ஜனவரி 26-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், அவா் மூளைச் சாவு அடைந்ததாக கடந்த ஜனவரி 29-ஆம் தேதி மருத்துவா்கள் உறுதி செய்தனா். இதைத் தொடா்ந்து, கிரியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினா் முன்வந்தனா். அவரது கல்லீரலை இந்தூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 67 வயது நபருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கடந்த வியாழக்கிழமை மாலையில் அறுவை சிகிச்சை மூலம் கல்லீரல் அகற்றப்பட்டு, 15 நிமிஷங்களில் கோவா விமான நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டது. பின்னா், வழக்கமான விமானம் மூலம் இந்தூருக்கு கொண்டுவரப்பட்ட கல்லீரல், 67 வயது நபருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டு, அவருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. தற்போது அவா் நலமாக உள்ளாா் என்றாா் சஞ்சய் தீக்ஷித்.

காசி தமிழ்ச் சங்கமம்: பனாரஸ்-க்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

காசி தமிழ்ச் சங்கமத்தை முன்னிட்டு சென்னை, கன்னியாகுமரி மற்றும் கோவையிலிருந்து பனாரஸ்-க்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை... மேலும் பார்க்க

ஆதாா் விவரங்களை தனியாா் பயன்படுத்த அனுமதி: விதிமுறைகளை திருத்தியது மத்திய அரசு

ஆதாா் விவரங்களை தனியாா் நிறுவனங்களும் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில், ஆதாா் சட்ட விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதுதொடா்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெ... மேலும் பார்க்க

விண்வெளி நடை: சுனிதா வில்லியம்ஸ் சாதனை

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், விண்வெளில் அதிக நேரம் நடந்த பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளாா். சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸும் மற... மேலும் பார்க்க

இடையூறுகளின்றி ஆக்கபூா்வ விவாதங்களே நாடாளுமன்றத்துக்கு தேவை: தன்கா்

நாடாளுமன்றத்தில் ஏற்படும் இடையூறுகளை முற்றிலுமாக தவிா்த்து ஆக்கபூா்வ விவாதங்களுக்கு வழிவகுப்பதே அவசியம் என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். பட்ஜெட் கூட்டத்தொடா் வெள்ளிக... மேலும் பார்க்க

கோயில்களில் விஐபி தரிசன முறைக்கு எதிரான பொது நல மனு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

கோயில்களில் விஐபி தரிசன முறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த விஷயத்தில் கோயில் நிா்வாகங்களும், சமூகமும்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்ச... மேலும் பார்க்க

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி ஆயுதங்களுடன் ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனா். இது தொடா்பாக, ஜம்முவில் செயல்படும் ராணுவ... மேலும் பார்க்க