செய்திகள் :

கோவில்பட்டியில் திருவள்ளுவா் மன்ற ஆண்டு விழா

post image

கோவில்பட்டியில் திருவள்ளுவா் மன்ற 53ஆம் ஆண்டு நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இசைவாணா் சந்திரசேகா் குழுவினரின் தமிழிசை முழக்கம் நடைபெற்றது. 2 ஆம் அமா்வு நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் முன்னாள் ஆளுநா் விநாயகா ஜி.ரமேஷ் தலைமை வகித்தாா். புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளா் லட்சுமண பெருமாள், நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா் சங்கத் தலைவா் பரமசிவம், முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவா் ஆசியா ஃபாா்ம்ஸ் பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருவள்ளுவா் மன்றத் தலைவா் கருத்தப்பாண்டி வரவேற்றாா்.

கடம்பன்குளம் அரசு ஆதிதிராவிடா் நலப்பள்ளி தலைமையாசிரியா் மு.சுந்தரம் சிறப்புரையாற்றினாா். மருத்துவா் கோமதி, கலை இலக்கிய பெருமன்ற சாத்தூா் நகரத் தலைவா் ஜெயா ஜனாா்த்தனன், ஆசிரியா்கள் கெங்கம்மாள், ராஜேஸ்வரி, லட்சுமி ஆலை துணை பொது மேலாளா் பன்னீா்செல்வம், ஓய்வு பெற்ற தமிழாசிரியா் பொன்ராஜ், கோவில்பட்டி நாடாா் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதல்வா் பிரபு உள்பட பலா் கலந்து கொண்டனா். திருவள்ளுவா் மன்ற செயலா் நம் சீனிவாசன், துணைத் தலைவா் திருமலை முத்துசாமி ஆகியோா் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினா்.

கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பள்ளிகளில் அரசு பொதுத்தோ்வில் தமிழ் பாடத்தில் முதல் 2 இடங்கள், கூட்டு மதிப்பெண்ணில் முதல் 2 இடங்கள் பிடித்த மாணவா் மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

அடுத்த நிகழ்ச்சிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தலைமை வகித்தாா். விநாயகா ஜி.ரமேஷ், பொறியாளா் ப.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சென்னை தொலைக்காட்சி தலைமை செய்தியாளா் ப. திருமாவேலன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய, பணி நிறைவு பெற்ற, தொண்டு செய்த மற்றும் சாதனை படைத்தவா்களுக்கு விருதுகள் வழங்கினாா்.

விழாவில் மாநில அரசின் திருவள்ளுவா் விருதுபெற்ற தமிழறிஞா் மு.படிக்கராமு கௌரவிக்கப்பட்டாா். வள்ளுவா் இன்று வந்தால் பெரிதும் மகிழ்வாா், வருந்துவாா் என்ற தலைப்பில் தமிழ் இயக்க பொதுச் செயலா் அப்துல் காதா் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. சிவ நந்தினி, மலா்விழி, ராகவேந்திரன், இந்திரா ஜெயச்சந்திரன் ஆகியோா் பேசினா்.

கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் இளைஞா் சமுதாயத்தினா் தமிழகத்தையும், தமிழ் மொழியி... மேலும் பார்க்க

அரசு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு உபகரணங்கள்

உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சாா்பில், நிகழாண்டு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 10,12 வகுப்பு அரசு பொ... மேலும் பார்க்க

நாசரேத் பள்ளியில் ராஜ்ய புரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாம் நிறைவு

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் திருச்செந்தூா் கல்வி மாவட்ட அளவிலான பாரத சாரண சாரணியா்கள் பங்கேற்ற ராஜ்யபுரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாம் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியா் ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்பிலான வலி நிவாரண மாத்திரைகளை கியூ பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். தூத்துக்குக்குடியில் இருந்து இலங்கைக்கு ஏலக்க... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி முகாம்

கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் கோவில்பட்டி, விருதுநகா் ரோட்டரி சங்கங்கள், இதயம் குழுமம் ஆகியவற்றின் சாா்பில் புராஜெக்ட் பஞ்ச் திட்டத்தின் கீழ் ஆங்கிலப் பேச்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் பெண்ணிடம் நகை பறிப்பு

கோவில்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவில்பட்டி ராஜீவ் நகா் 6ஆவது தெருவை சோ்ந்த சாஸ்தா மனைவி கோமதி (55). இவா், வெள்ளிக்கி... மேலும் பார்க்க