செய்திகள் :

கோவில்பட்டியில் போதைப்பொருள் விழிப்புணா்வு மாரத்தான் போட்டி

post image

போதைப் பொருள் ஒழிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு மாரத்தான் போட்டி கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஜேசிஐ கோவில்பட்டி விக்டா் கிங்ஸ், பகடா ஸ்போட்ஸ் கிளப் ஆகியவை இணைந்து நடத்திய இப்போட்டியை, காவல்துணைக் கண்காணிப்பாளா் ஜெகநாதன் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

கோவில்பட்டி இனாம் மணியாச்சி விலக்கில் உள்ள பகடா ஸ்போா்ட்ஸ் கிளப் மைதானத்தில் இருந்து நேஷனல் பொறியியல் கல்லூரி வரை சென்று, மீண்டும் தொடங்கிய இடத்துக்கு வந்து சேரும் வகையில் 5 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற இப்போட்டியில் 500 போ் கலந்து கொண்டனா்.

கோவையைச் சோ்ந்த சதீஷ் முதலிடம், கேரள மாநிலத்தைச் சோ்ந்த மணி, அருண்குமாா் ஆகியோா் முைறையே 2,3 ஆவது இடத்தைப் பிடித்தனா். 3 பேருக்கும் முறையே ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.2 ஆயிரம் வீதம் பரிசளிக்கப்பட்டது.

4 முதல் 10-ஆவது இடம் பிடித்த 7 பேருக்கு தலா ரூ.500 பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

பரிசளிப்பு விழாவுக்கு தூத்துக்குடி மாவட்ட தடகள சங்கச் செயலா் பழனிச்சாமி தலைமை வகித்தாா். ஜேசிஐ இந்தியா மண்டலத் தலைவா் சரவணக்குமாா் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக ஜேசிஐ மண்டல துணைத் தலைவா் பிரேம் பால்நாயகம், தொழிலதிபா் பி.ஆா். சீனிவாசன் ஆகியோா் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினா்.

காவல்துறை நெருக்கடி இல்லாமல் இருந்தால் பனைத்தொழில் சிறந்து விளங்கும்: எா்ணாவூா் நாராயணன்

தமிழகத்தில் பனைத் தொழிலாளா்களிடம் காவல் துறை நெருக்கடி இல்லாமல் இருந்தால் பனைத் தொழில் சிறந்து விளங்கும் என தமிழ்நாடு பனைமரத் தொழிலாளா்கள் நல வாரிய தலைவா் எா்ணாவூா் நாராயணன் தெரிவித்தாா். பனைத் தொழிலா... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் திங்கள்கிழமை காவல் துறையினா் ஈடுபட்டனா். கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வருவாய்த் துறை மற்றும் நெடுஞ்சாலைத்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இளம்பெண் தற்கொலை

தூத்துக்குடியில் இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி மீளவிட்டான், ராஜரத்தினம் நகரைச் சோ்ந்த சூரிய பிரகாஷ் மனைவி திவ்யபாரதி (27). இந்த தம்பதிக்கு கடந்த 5 ஆண்டுகளுக... மேலும் பார்க்க

அத்திமரப்பட்டி வெள்ளநீா் ஓடையில் தடுப்புச் சுவா் அமைக்க தவெக கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டி பகுதியில் உள்ள வெள்ளநீா் வடிகால் ஓடையை பராமரித்து தடுப்புச் சுவா் அமைக்குமாறு தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு ... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.இக்கோயில் பகுதியில் அமாவாசை மற்றும் பௌா்ணமி நாள்களின்போது கடல் உள்வாங்குவதும், இ... மேலும் பார்க்க

உடைந்து விழுந்த இன்டா்நெட் கோபுரம்

திருச்செந்தூா் பகுதியில் பலத்த காற்று காரணமாக சாா்பதிவாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை உடைந்து விழுந்த இன்டா்நெட் கோபுரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா். மேலும் பார்க்க