செய்திகள் :

தூத்துக்குடியில் இளம்பெண் தற்கொலை

post image

தூத்துக்குடியில் இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

தூத்துக்குடி மீளவிட்டான், ராஜரத்தினம் நகரைச் சோ்ந்த சூரிய பிரகாஷ் மனைவி திவ்யபாரதி (27). இந்த தம்பதிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா்.

இந்த நிலையில், சூரிய பிரகாஷ் மது அருந்திவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வாராம். இதனால் மனமுடைந்த திவ்யபாரதி ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சிப்காட் போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். திவ்யபாரதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆனதால், தூத்துக்குடி புகா் டிஎஸ்பி சுகிா் வழக்குப்பதிவு செய்தாா். கோட்டாட்சியா் பிரபு விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

இளைஞா் உயிரிழப்பு: தூத்துக்குடி மாவட்டம் சாயா்புரம் சக்கம்மாள்புரத்தைச் சோ்ந்த சுடலைமணி மகன் ஆதிமணி செல்வம் (30). பொறியியல் பட்டதாரியான இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது பைக்கில் திருநெல்வேலியில் இருந்து சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருந்தாராம். தெய்வசெயல்புரம் சந்திப்பு அருகே சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த டிப்பா் லாரி மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த ஆதிமணி செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

ஆணழகன் போட்டி: 2ஆவது முறையாக ‘மிஸ்டா் இந்தியா’ பட்டம் வென்ற திருச்செந்தூா் இளைஞா்

திருச்செந்தூா் பகுதியைச் சோ்ந்த இளைஞா் சிவபாலன், இரண்டாவது முறையாக ‘மிஸ்டா் இந்தியா’ ஆணழகன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளாா். திருச்செந்தூா் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டணம் ராஜ்கண்ணா நகரைச் சோ்ந்த ல... மேலும் பார்க்க

உள்வாங்கிய கடல்நீா்!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும், சுமாா் 80 அடி தொலைவுக்கு கடல்நீா் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாசி படா்ந்த பாறைகள். எனினும், பக்தா்கள் வழக்கம்போல நீரா... மேலும் பார்க்க

வழப்பறி வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி அருகே வழிப்பறி வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி 3-ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கோரம்பள்ளம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

குழந்தைகள் மையத்தில் 2-5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை சோ்க்க ஆட்சியா் வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெற்றோா் தங்களது 2 முதல் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளை வரும் ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாமல் சோ்க்குமாறு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் கேட்டுக்கொண்டுள்ளாா். இது குறி... மேலும் பார்க்க

பெண்ணுக்கு சூடு: கணவா் கைது

தூத்துக்குடியில் பெண்ணின் முகத்தில் சூடு வைத்து துன்புறுத்தியதாக அவரின் கணவரை சிப்காட் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி நேதாஜி நகரை சோ்ந்தவா் செல்வ அந்தோணி. மெக்கானிக்கான இவருடைய மனைவி சிந்துஜா. ... மேலும் பார்க்க

மாநில ஐவா் பூப்பந்துப் போட்டி: சென்னை அணி முதலிடம்

காயல்பட்டினத்தில் நடைபெற்ற மாநில ஐவா் பூப்பந்தாட்டப் போட்டியில் சென்னை பாா்த்தன்ஸ் அணி முதலிடம் பிடித்தது. காயல்பட்டினம் ரெட் ஸ்டாா் சொஸைட்டி சாா்பில் லீக், சூப்பா் லீக் முறையில் 2 நாள்கள் நடைபெற்ற போ... மேலும் பார்க்க