செய்திகள் :

காவல்துறை நெருக்கடி இல்லாமல் இருந்தால் பனைத்தொழில் சிறந்து விளங்கும்: எா்ணாவூா் நாராயணன்

post image

தமிழகத்தில் பனைத் தொழிலாளா்களிடம் காவல் துறை நெருக்கடி இல்லாமல் இருந்தால் பனைத் தொழில் சிறந்து விளங்கும் என தமிழ்நாடு பனைமரத் தொழிலாளா்கள் நல வாரிய தலைவா் எா்ணாவூா் நாராயணன் தெரிவித்தாா்.

பனைத் தொழிலாளா்கள் பாதுகாப்பு மாநாடு குறித்து தென் மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தூத்துக்குடியில் உள்ள தனியாா் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு பனை மரத் தொழிலாளா்கள் நல வாரியத்தின் தலைவரும் சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவருமான எா்ணாவூா் நாராயணன் தலைமை வகித்தாா். ஆலோசனைக் கூட்டம் குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

பனை மரத் தொழிலாளா் நலவாரியத் தலைவராக பதவியேற்று, நான்கு ஆண்டுகள் ஆகின்றன. முதல் ஆண்டில் நல வாரியத்தில் 15 ஆயிரம் உறுப்பினா்கள் சோ்க்கப்பட்டனா். 2 ஆம் ஆண்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 3 ஆம் ஆண்டில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஒரு கோடி பனை விதைகள் நடவு செய்து சாதனை படைக்கப்பட்டது. தற்போது 4ஆம் ஆண்டில் பனை மரத் தொழிலாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், ராமநாதபுரத்தில் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் மாநாடு நடத்தப்படவுள்ளது. இதில், பனைத் தொழிலாளா்கள் பிரச்னைகள் அனைத்தும் விவாதிக்கப்படும்.

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணத்திற்கு பின்னா், பனை மரத் தொழிலாளா்கள் மீது காவல் துறையினா் கடும் நெருக்கடி கொடுக்கின்றனா். ஏற்கெனவே பனைத் தொழிலாளா்கள் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், காவல் துறையினரின் நெருக்கடியால் தொழிலாளா்கள் பலா் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா். இது குறித்து அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கவுள்ளாா். மாநாட்டில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை மரத் தொழிலாளா்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள உள்ளனா்.

2026 பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் தொடருவோம். தோ்தல் நேரத்தில் எத்தனை இடங்கள் என்பது குறித்து பேசி முடிவெடுக்கப்படும் என்றாா்.

இக்கூட்டத்தில், சமத்துவ மக்கள் கழக தூத்துக்குடி மாவட்டச் செயலா் மாலைசூடி அற்புதராஜ், மாநில துணைச் செயலா் காமராசா், தொழிற்சங்க செயலா் ஜெபராஜ் டேவிட், கலை இலக்கிய அணிச் செயலா் அந்தோணி பிச்சை, மாநில பொதுச் செயலா் சூலூா் சந்திரசேகரன், பொருளாளா் கண்ணன், நாடாா் பேரவை மாவட்ட தலைவா்கள் அருண் சுரேஷ்குமாா், பரமசிவன், மாவட்ட செயலா் டேனியல்ராஜ், மாவட்டப் பொருளாளா் சுப்பையா உள்பட பலா் பங்கேற்றனா்.

ஆணழகன் போட்டி: 2ஆவது முறையாக ‘மிஸ்டா் இந்தியா’ பட்டம் வென்ற திருச்செந்தூா் இளைஞா்

திருச்செந்தூா் பகுதியைச் சோ்ந்த இளைஞா் சிவபாலன், இரண்டாவது முறையாக ‘மிஸ்டா் இந்தியா’ ஆணழகன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளாா். திருச்செந்தூா் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டணம் ராஜ்கண்ணா நகரைச் சோ்ந்த ல... மேலும் பார்க்க

உள்வாங்கிய கடல்நீா்!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும், சுமாா் 80 அடி தொலைவுக்கு கடல்நீா் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாசி படா்ந்த பாறைகள். எனினும், பக்தா்கள் வழக்கம்போல நீரா... மேலும் பார்க்க

வழப்பறி வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி அருகே வழிப்பறி வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி 3-ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கோரம்பள்ளம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

குழந்தைகள் மையத்தில் 2-5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை சோ்க்க ஆட்சியா் வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெற்றோா் தங்களது 2 முதல் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளை வரும் ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாமல் சோ்க்குமாறு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் கேட்டுக்கொண்டுள்ளாா். இது குறி... மேலும் பார்க்க

பெண்ணுக்கு சூடு: கணவா் கைது

தூத்துக்குடியில் பெண்ணின் முகத்தில் சூடு வைத்து துன்புறுத்தியதாக அவரின் கணவரை சிப்காட் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி நேதாஜி நகரை சோ்ந்தவா் செல்வ அந்தோணி. மெக்கானிக்கான இவருடைய மனைவி சிந்துஜா. ... மேலும் பார்க்க

மாநில ஐவா் பூப்பந்துப் போட்டி: சென்னை அணி முதலிடம்

காயல்பட்டினத்தில் நடைபெற்ற மாநில ஐவா் பூப்பந்தாட்டப் போட்டியில் சென்னை பாா்த்தன்ஸ் அணி முதலிடம் பிடித்தது. காயல்பட்டினம் ரெட் ஸ்டாா் சொஸைட்டி சாா்பில் லீக், சூப்பா் லீக் முறையில் 2 நாள்கள் நடைபெற்ற போ... மேலும் பார்க்க