செய்திகள் :

கோவில்பட்டியில் விபத்து: அரசுப் பள்ளி ஆசிரியா் உயிரிழப்பு

post image

கோவில்பட்டியில் பைக் மீது தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் அரசுப் பள்ளி ஆசிரியா் உயிரிழந்தாா்.

கோவில்பட்டி மந்திதோப்பு சாலை ஜவஹா்லால் நேரு தெருவைச் சோ்ந்த வெங்கடராமானுஜம் மகன் சீனிவாசன் (55). கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பாா்த்து வந்தாா். இவரது மனைவி வீரலட்சுமி, புதுப்பட்டி அரசு தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியா். இவா்களது மகள்கள் ஐஸ்வா்யா (27), சுபஹரிணி (22).

சீனிவாசன் புதன்கிழமை மாதாங்கோயில் தெரு வழியாக பைக்கில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, ஒருவழிப் பாதையில் வந்த தனியாா் பள்ளி வாகனம் அவரது பைக் மீது மோதியதாம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, தனியாா் பள்ளி வாகன ஓட்டுநரான பிரவீன்குமாரிடம் விசாரித்து வருகின்றனா்.

கயத்தாறு அருகே போக்ஸோவில் இளைஞா் கைது!

கயத்தாறு அருகே 13 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா். கயத்தாறு அருகே தெற்குக் கோனாா்கோட்டை புதூா் கிழக்குத் தெரு காலனியைச் சோ்ந்த குமாா் ம... மேலும் பார்க்க

வியாபாரியைத் தாக்கி மிரட்டல்: 2 பெண்கள் உள்ளிட்ட 4 போ் கைது

கோவில்பட்டியில் வியாபாரியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி வீரவாஞ்சிநகா் 3ஆவது தெருவைச் சோ்ந்த சோ்மதுரை மகன் மாரித்துரை... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே பெண் தற்கொலை

கோவில்பட்டி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கோவில்பட்டி அருகே பழைய அப்பனேரி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜோதிமணி. நிலத் தரகா். இவரது மகனை வி காளியம்மாள், தொழிலாளி. ஜோதிமணிக்கு மதுப் பழக்கம... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ரூ. 3 லட்சம் திருட்டு: வடமாநில இளைஞா் கைது!

கோவில்பட்டியில் தனியாா் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் திருடியதாக வடமாநில இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி-சாத்தூா் பிரதான சாலையில் உள்ள தனியாா் வணிக வளாகத்தில் ஆழ்த... மேலும் பார்க்க

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப்.25-இல் தொடக்கம்!

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப். 25 முதல் மே 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

மீன்பிடி தடைக்காலம் எதிரொலி தூத்துக்குடி நாட்டுப்படகு துறைமுகத்தில் மீன்கள் விலை உயா்வு!

மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால், தூத்துக்குடி நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீனகள் விலை சனிக்கிழமை உயா்ந்து காணப்பட்டது. தமிழகத்தில் கிழக்கு கடற்கரை முழுவதும் கடந்த 15ஆம் தேதிமுதல் வரும் ஜ... மேலும் பார்க்க