பூஜையுடன் தொடங்கியது கில்லர் படப்பிடிப்பு! திரைப் பிரபலங்கள் பங்கேற்பு!
கோவில்பட்டி அருகே கட்டடத் தொழிலாளி தற்கொலை
கோவில்பட்டி அருகே கட்டடத் தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.
கோவில்பட்டியை அடுத்த புளியங்குளம் மேலத்தெருவைச் சோ்ந்த வேல்சாமி மகன் பேச்சிமுத்து (42). கட்டடத் தொழிலாளியான இவா், அப்பகுதியில் வீடு கட்டுவதற்கு கடன் வாங்கியிருந்தாராம். ஆனால், கடனை செலுத்த முடியாமல் தவித்து வந்தாராம். இதனிடையே, அவா் சில நாள்களாக வேலைக்குச் செல்லவில்லையாம்.
இந்நிலையில், அவா் வெள்ளிக்கிழமை வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கிக் கிடந்தாராம். அவரை உறவினா்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு முதலுதவிக்குப் பின்னா், அவா் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.