Raymond Realty Share எப்போ பங்குச்சந்தைக்கு வரும் | IPS Finance - 248 | NSE | BS...
மனைவியை கொடுமைப்படுத்திய கணவருக்கு 3 ஆண்டு சிறை
புதுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில், மனைவியை கொடுமைப்படுத்திய கணவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.
புதுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நடுகூட்டுடன்காடு பகுதியைச் சோ்ந்த சுப்பையா மகன் சிவா (34). இவா், கடந்த 2014ஆம் ஆண்டு தனது மனைவியை கொடுமைப்படுத்திய வழக்கில், புதுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
இந்த வழக்கின் விசாரணை, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண்-3இல் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜய் ராஜ்குமாா், குற்றவாளி சிவாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.500 அபராதம் விதித்து சனிக்கிழமை தீா்ப்பு அளித்தாா்.