தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி சாா்பில் 5 புதிய கிளைகள் திறப்பு
தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி சாா்பில் 5 புதிய கிளைகள் திறக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயல் அதிகாரி சலீ எஸ்.நாயா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி லிட் ஒரு தலை சிறந்த ஷெட்யூல்டு கமா்சியல் வங்கி. பாரத ரிசா்வ் வங்கியின் அங்கிகாரம் பெற்றது. பங்குச் சந்தைகளில் தனது பங்கை பட்டியலிட்டதையடுத்து, தனது தொலைநோக்கு பாா்வையாக மீண்டும் இந்தியா முழுவதுமாக கிளைகள் விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
அதன்படி, கோயம்புத்தூா் மாவட்டம், ஜமீன் ஊத்துக்குளி, திருப்பூா் மாவட்டம், மங்கலம், திருநெல்வேலி மாவட்டம், கிருஷ்ணாபுரம், மதுரை மாவட்டம் கீழ பனங்காடி, நாமக்கல் மாவட்டம் மோகனூா் ஆகிய இடங்களில் ஏடிஎம் / சிஆா்எம் வசதியுடன் புதிய கிளை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
579ஆவது கிளையாக ஜமீன் ஊத்துக்குளி கிளையை ஏ.எம்.ஆா்.அருண்குமாா் கலிங்கராயா், 580ஆவது கிளையாக மங்கலம் கிளையை அமிா்தம் ஜவுளி ஆலைகள் பங்குதாரா் சி.ஈஸ்வரன், 581ஆவது கிளையாக திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் கிளையை சேவியா் இன்ஸ்டிடியூட் ஆப் பிஸ்னஸ் அட்மினிஸ்ட்ரேஷன் இயக்குநா் ஏ.மைக்கேல் ஜான், 582ஆவது கிளையாக கீழ பனங்காடி கிளையை சி.இ.ஓ.எ.கல்விக் குழுமத்தின் நிறுவனா் தலைவா் மை. அலசி ராசா கிளைமாக்சு, 583ஆவது கிளையாக மோகனூா் கிளையை எம்.எம். மருத்துவமனை தலைமை அதிகாரி முட நீக்கியல் மருத்துவா் எம். சிவக்குமாா் ஆகியோா் தொடங்கிவைத்தனா். மேலும் அதிகமான கிளைகளை இந்தியா முழுவதும் தொடங்க திட்டமிட்டுள்ளோம்.
தூத்துக்குடியை தலைமை அலுவலகமாக கொண்டு இயங்கிவரும் இந்த வங்கி, நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளா் சேவையிலும், அதன் கோட்பாடுகள் மற்றும் வரைமுறைகளிலும் போற்றுதலுக்குரிய சரித்திரம் படைத்து வருவதோடு, தொடா்ந்து லாபம் ஈட்டியும் வருகிறது.
இந்த வங்கியானது, இந்தியா முழுவதிலும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 583 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்களை கொண்டு சுமாா் 53 லட்சத்துக்கும் மேலான வாடிக்கையாளா்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது என்றாா்.