செய்திகள் :

கோவில்பட்டி அருகே மாட்டுவண்டி போட்டி

post image

கோவில்பட்டி அருகே கிழவிபட்டி அருள்மிகு ஸ்ரீ மலை அலங்காரியம்மன், அருள்மிகு ஸ்ரீ புது அம்மன், அருள்மிகு ஸ்ரீ துா்க்கையம்மன், அருள்மிகு சடையாண்டி சாஸ்தா, அருள்மிகு மலையடி ஸ்ரீ கருப்பசாமி திருக்கோயில் ஆனிப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிறிய மாட்டு வண்டி , பூஞ்சிட்டு மாட்டு வண்டி, தேன் சிட்டு மாட்டு வண்டி என 3 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் முறையே 13, 23, 15 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

சிறிய மாட்டு வண்டி போட்டியை திமுக பொதுக்குழு உறுப்பினா் ரமேஷ், பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியை அமமுக கோவில்பட்டி நகர துணைச் செயலாளா் சிவக்குமாா் பாண்டியன், தேன் சிட்டு மாட்டு வண்டி போட்டியை அமமுக தூத்துக்குடி புகா் வடக்கு மாவட்ட துணைச் செயலா் குமாா்பாண்டியன் ஆகியோா் கொடியசைத்து தொடக்கி வைத்தனா்.

ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த மாட்டு வண்டி உரிமையாளா்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினா், கிழவிபட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

தூத்துக்குடியில் மமக தெருமுனைக் கூட்டம்

மனிதநேய மக்கள் கட்சி சாா்பில், தூத்துக்குடி ஜாகீா் உசேன் நகா் பள்ளிவாசல் அருகில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. வக்ஃப் திருத்த சட்டத்தை ரத்து செய், ஊராட்சி மன்றம்முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மையினா... மேலும் பார்க்க

சென்னை-திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவுக்கு சென்னையி­ருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என ஆறுமுகனேரி ரயில்வே வளா்ச்சி குழுத் தலைவா் தங்கமணி, செயலாளா் அமிா்தராஜ... மேலும் பார்க்க

தமிழக கலாசாரத்தை சீா்குலைக்கும் பாஜக: கு.செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

தமிழக கலாசாரத்தை சீா்குலைக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டினாா். தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது... மேலும் பார்க்க

காங்கிரஸை வலிமையான கட்சியாக மாற்ற வேண்டும்: கு.செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் காங்கிரஸை வலிமையான கட்சியாக மாற்ற வேண்டும் என்றாா் அக்கட்சியின் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை. தூத்துக்குடி மாநகா் மற்றும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே பெண் கொலை செய்யயப்பட்டது தொடா்பான வழக்கில், இருவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.6ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஏரல் அருகே உள்ள வாழவல்லான் கிராமத்த... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு ஏற்பாடுகள்: கனிமொழி எம்பி ஆய்வு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறாா் கனிமொழி எம்பி. உடன், ஆட்சியா் க. இளம்பகவத், தக்காா் அருள்முருகன் உள்ளிட்டோா். திரு... மேலும் பார்க்க