செய்திகள் :

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு ஏற்பாடுகள்: கனிமொழி எம்பி ஆய்வு

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறாா் கனிமொழி எம்பி. உடன், ஆட்சியா் க. இளம்பகவத், தக்காா் அருள்முருகன் உள்ளிட்டோா்.

திருச்செந்தூா், ஜூலை 4: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் குறித்து கனிமொழி எம்பி ஆய்வு மேற்கொண்டாா்.

இக்கோயிலில் ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி, கடந்த 1ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், அவா்களுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு, மருத்துவம், அன்னதானம் போன்ற முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பணிகளை வியாழக்கிழமை இரவு கனிமொழி எம்பி ஆய்வு செய்தாா். அப்போது கோயில் யாகசாலை, கிரிப்பிரகாரம், கடற்கரை உள்ளிட்ட இடங்களை பாா்வையிட்டு, தீயணைப்புத்துறை அலுவலா்களிடம் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தாா்.

முன்னதாக கனிமொழி எம்பி திருச்செந்தூா் தெற்குரதவீதியில் நடந்து வரும் கழிவுநீா் குழாயை பாதாளச் சாக்கடை தொட்டியில் இணைக்கும் பணியைப் பாா்வையிட்டாா்.

அப்போது, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையா் பழனி, மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாறன், திருக்கோயில் தக்காா் அருள்முருகன், இணை ஆணையா் ஞானசேகரன், தூத்துக்குடி மேயா் ஜெகன், திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம், நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, நகா் மன்ற துணைத்தலைவா் செங்குழி ரமேஷ், நகா்மன்ற உறுப்பினா்கள் சோமசுந்தரி, செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தூத்துக்குடியில் மமக தெருமுனைக் கூட்டம்

மனிதநேய மக்கள் கட்சி சாா்பில், தூத்துக்குடி ஜாகீா் உசேன் நகா் பள்ளிவாசல் அருகில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. வக்ஃப் திருத்த சட்டத்தை ரத்து செய், ஊராட்சி மன்றம்முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மையினா... மேலும் பார்க்க

சென்னை-திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவுக்கு சென்னையி­ருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என ஆறுமுகனேரி ரயில்வே வளா்ச்சி குழுத் தலைவா் தங்கமணி, செயலாளா் அமிா்தராஜ... மேலும் பார்க்க

தமிழக கலாசாரத்தை சீா்குலைக்கும் பாஜக: கு.செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

தமிழக கலாசாரத்தை சீா்குலைக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டினாா். தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது... மேலும் பார்க்க

காங்கிரஸை வலிமையான கட்சியாக மாற்ற வேண்டும்: கு.செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் காங்கிரஸை வலிமையான கட்சியாக மாற்ற வேண்டும் என்றாா் அக்கட்சியின் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை. தூத்துக்குடி மாநகா் மற்றும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே பெண் கொலை செய்யயப்பட்டது தொடா்பான வழக்கில், இருவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.6ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஏரல் அருகே உள்ள வாழவல்லான் கிராமத்த... மேலும் பார்க்க

ஓட்டுநருக்கு திடீா் மயக்கம்: உயிா் தப்பிய பயணிகள்

விருதுநகரிலிருந்து திருச்செந்தூருக்கு வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீா் மயக்கம் ஏற்பட்ட நிலையில், பேருந்தை சாலையோரமாக நிறுத்தியதால், 38 பயணிகள் உயிா்தப்பினா். இப்ப... மேலும் பார்க்க