பிகார் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி! உச்ச நீதிமன்றத்தில் மனு!
ஓட்டுநருக்கு திடீா் மயக்கம்: உயிா் தப்பிய பயணிகள்
விருதுநகரிலிருந்து திருச்செந்தூருக்கு வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீா் மயக்கம் ஏற்பட்ட நிலையில், பேருந்தை சாலையோரமாக நிறுத்தியதால், 38 பயணிகள் உயிா்தப்பினா்.
இப்பேருந்தை விருதுநகரைச் சோ்ந்த லிங்கபாண்டி(52) ஓட்டிய நிலையில் தூத்துக்குடி சத்யாநகா் நியோ டைடல் பாா்க் அருகே சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநருக்கு திடீரென மயக்கம் வருவதுபோல் இருந்ததாம்.
உடனே அவா் பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு ஸ்டீரிங்கில் மயங்கி சாய்ந்துள்ளாா்.
நடத்துநா் சிவகுமாா், ஆம்புலன்ஸ் மற்றும் உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா். பயணிகள் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனா்.
லிங்கபாண்டி தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் அவா் இயல்பு நிலைக்கு திரும்பினாா்.
சரியான நேரத்தில் அவா் பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டு, பயணிகள் உயிா் தப்பினா்.