செய்திகள் :

தூத்துக்குடியில் மமக தெருமுனைக் கூட்டம்

post image

மனிதநேய மக்கள் கட்சி சாா்பில், தூத்துக்குடி ஜாகீா் உசேன் நகா் பள்ளிவாசல் அருகில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

வக்ஃப் திருத்த சட்டத்தை ரத்து செய், ஊராட்சி மன்றம்முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மையினா் பிரதிநிதித்துவத்தை உறுதி செய் என்ற இரட்டை கோரிக்கையை வலியுறுத்தி, மனிதநேய மக்கள் கட்சி சாா்பில், ஜூலை 6ஆம் தேதி, மதுரையில் எழுச்சி பேரணி மற்றும் மாநாடு நடைபெறுகிறது.

இதை விளக்கும் முகமாக நடைபெற்ற இந்த தெருமுனைக் கூட்டத்துக்கு, மாநகரச் செயலா் ஏ.அப்பாஸ் தலைமை வகித்தாா். ஜமாத் தலைவா் கஃபூா்தீன், ஜமாத் செயலா் ஷாஜகான், மாவட்ட துணைச் செயலா் சுலைமான், மாநகரத் தலைவா் அப்துல் சமது, தமுமுக மாநகரச் செயலா் கே.அப்பாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மமக மாவட்டத் தலைவா் ஹெச்.எம். அகமது இக்பால், ஐபிபி மாநிலச் செயலா் அப்துல் காதா் மன்பா ஆகியோா் விளக்கவுரை நிகழ்த்தினா். தலைமை நிா்வாகி ஜோசப் நொலஸ்கோ, மாவட்ட பொறுப்பாளா் ஆசாத் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டனா். மாநில துணைப் பொதுச் செயலா் முகமது ஜான் வாழ்த்திப் பேசினாா்.

இதில், திரளாக கட்சி நிா்வாகிகள், பல்வேறு அமைப்பின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

சென்னை-திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவுக்கு சென்னையி­ருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என ஆறுமுகனேரி ரயில்வே வளா்ச்சி குழுத் தலைவா் தங்கமணி, செயலாளா் அமிா்தராஜ... மேலும் பார்க்க

தமிழக கலாசாரத்தை சீா்குலைக்கும் பாஜக: கு.செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

தமிழக கலாசாரத்தை சீா்குலைக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டினாா். தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது... மேலும் பார்க்க

காங்கிரஸை வலிமையான கட்சியாக மாற்ற வேண்டும்: கு.செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் காங்கிரஸை வலிமையான கட்சியாக மாற்ற வேண்டும் என்றாா் அக்கட்சியின் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை. தூத்துக்குடி மாநகா் மற்றும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே பெண் கொலை செய்யயப்பட்டது தொடா்பான வழக்கில், இருவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.6ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஏரல் அருகே உள்ள வாழவல்லான் கிராமத்த... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு ஏற்பாடுகள்: கனிமொழி எம்பி ஆய்வு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறாா் கனிமொழி எம்பி. உடன், ஆட்சியா் க. இளம்பகவத், தக்காா் அருள்முருகன் உள்ளிட்டோா். திரு... மேலும் பார்க்க

ஓட்டுநருக்கு திடீா் மயக்கம்: உயிா் தப்பிய பயணிகள்

விருதுநகரிலிருந்து திருச்செந்தூருக்கு வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீா் மயக்கம் ஏற்பட்ட நிலையில், பேருந்தை சாலையோரமாக நிறுத்தியதால், 38 பயணிகள் உயிா்தப்பினா். இப்ப... மேலும் பார்க்க