செய்திகள் :

டிரம்ப்பின் காலக்கெடுவை மோடி ஏற்பார்! ராகுல் கேலி!

post image

அமெரிக்கா விதித்த காலக்கெடுவுக்குள் பிரதமர் நரேந்திர மோடி வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வார் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இந்தியாவுடன் பெரியளவிலான ஒப்பந்தம் மேற்கொள்ளப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவித்திருந்தார். ஆனால், விவசாயம் மற்றும் பால்வளத் துறையில் சந்தையைத் திறந்துவிட டிரம்ப் தொடர்ந்து கோரிவருவதால், இரு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தத்துக்கு இழுபறி ஏற்பட்டு வருகிறது.

ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ``குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெரிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற அவசரத்தில் ஒன்றும் இந்தியா செயல்படவில்லை. இரு நாடுகளும் பயன்பெறும் வகையில்தான், முடிவுகள் ஏற்றுக் கொள்ளப்படும்’’ என்று கூறினார்.

இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் என்ன வேண்டுமானாலும் கூறட்டும். ஆனால், டிரம்ப்பின் காலக்கெடுவை பிரதமர் மோடி ஏற்றுக் கொள்வார் என்று பதிவிட்டுள்ளார்.

மற்ற நாடுகளைப்போல அல்லாமல், இந்தியாவில்தான் விவசாயத் துறையில் 40 சதவிகித மக்கள் பணிபுரிகின்றனர். அதுமட்டுமின்றி, உணவுப் பாதுகாப்புத் தரங்களையும் இந்தியா கருத்தில் கொள்ள வேண்டும்.

ஏனெனில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை இறக்குமதி செய்ய, இந்திய அரசு தயாராக இல்லை. அவை இந்தியாவின் பூர்விக விதைகளுடன் மகரந்தச் சேர்க்கை ஏற்படும் அபாயங்களும் உள்ளன.

இந்தியாவில் உணவில் உணர்ச்சி மற்றும் நம்பிக்கைகள் தொடர்பானவை உள்ளன. ஆகையால், தனது விவசாயத் துறையை பாதுகாப்பதற்காக, அமெரிக்காவுக்கு இறக்குமதி வரிகளை விதிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

Rahul Says PM Will Bow to Trump Before Deadline

மேற்கு வங்கத்தில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

மேற்கு வங்கத்தில் நாட்டு வெடி குண்டு வெடித்ததில் ஒருவர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள ரஜோவா கிராமத்தில் வீடு ஒன்றில் நேற்றிரவு 8.30 ... மேலும் பார்க்க

சம்பளத்திலும் சமத்துவம்! இந்தியா தொடர் முன்னேற்றம் - உலக வங்கி தகவல்!

வருமான சமத்துவத்தில் இந்தியா முன்னேறி வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாகக் கொண்டாடப்படும் இந்தியா, தற்போது மற்றொரு மைல்கல்லையும் எட்டியுள்ளது. வருமானத்தில் சமத்துவம்... மேலும் பார்க்க

அனைத்து பக்தர்களின் பாதுகாப்பும் எங்கள் முன்னுரிமை: துணைநிலை ஆளுநர்

ஜம்மு-காஷ்மீரில் யாத்திரைக்குச் செல்லும் ஒவ்வொரு பக்தர்களின் பாதுகாப்பும் எங்களது முன்னுரிமை என்று மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். வருடாந்திர அமர்நாத் யாத்திரை ஜூலை 3 தொடங்கி ஆகஸ்... மேலும் பார்க்க

அச்சுதானந்தன் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மாரடைப்பு மற்றும் வயது தொடர்பான உடல்நலக் குறைவால் அவர் ஜூன் 23ஆம் தேதி திருவனந்தபுரத்திலுள்ள தனியா... மேலும் பார்க்க

தெலங்கானா ரசாயன ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு!

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் நடைபெற்ற ரசாயன ஆலை வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிகாச்சி மருந்து ஆலையில், கடந்த ஜூன் 30 ஆம் தேதி நடைபெற்ற வெடி ... மேலும் பார்க்க

’ஐ.எஸ்.ஐ.’ தரச் சான்று பெற்ற ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம்?

தரம் குறைந்த ஹெல்மெட்களால் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று ‘நுகர்வோர் விவகாரம் மற்றும் இந்திய தர நிர்ணய துறை’ சனிக்கிழமை(ஜூலை 5) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தலைக்கவசம் அணிந்துகொ... மேலும் பார்க்க