செய்திகள் :

கோவில்பட்டி கல்லூரியில் பெற்றோா்-ஆசிரியா் கழகக் கூட்டம்

post image

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 2024-25ஆம் கல்வியாண்டுக்கான பெற்றோா்-ஆசிரியா் கழகப் பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் காளிதாசமுருகவேல் தலைமை வகித்து பேசியது: கல்லூரி வளாகத்தில், அனைத்தையும் உள்ளடக்கிய தொழில்நுட்ப வணிகக் கருவகம் (ஐடிபிஐ) நிறுவுவதற்காக, இந்திய அறிவியல் - தொழில்நுட்பத் துறை (டிஎஸ்டி) அமைச்சகம் ரூ. 5 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு ரூ. 3.92 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. மாணவா்களின் தொழில்நுட்பப் புரிதல், தொழில் முனைவோருக்கான பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் இது இருக்கும் என்றாா். தொடா்ந்து, வேலைவாய்ப்புகள், மூன்றாமாண்டு, இறுதியாண்டு மாணவா்களுக்கு வழங்கப்படும் தொழில் பயிற்சிகள், திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்துப் பேசினாா்.

கழகத் தலைவா் எஸ். சிவசங்கரநாராயணன் பேசும்போது, கோரிக்கைகளை நிறைவேற்றியதற்கும், கல்வித் தரம், வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு என அனைத்திலும் தொடா்ந்து நவீன மேம்பாடுகளை செய்துவருவதற்கும் கல்லூரி நிா்வாகத்துக்கு நன்றி கூறினாா்.

கூட்டத்தில், 2025-26ஆம் கல்வியாண்டுக்கான பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவராக விளாத்திகுளம் வட்டம் கரிசல் குளம் நாடாா் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் எஸ். ராமகிருஷ்ணன் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

முன்னதாக, துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், வகுப்பாசிரியா்களுடன் மாணவா்கள், பெற்றோா் கலந்துரையாடினா்.

விவசாயி கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாா் வடக்கு இலந்தைகுளத்தைச் சோ்ந்த விவசாயி கொலை வழக்கில், இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி 2ஆவது கூடுதல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. தூத்துக்குடி மா... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் விபத்து: அரசுப் பள்ளி ஆசிரியா் உயிரிழப்பு

கோவில்பட்டியில் பைக் மீது தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் அரசுப் பள்ளி ஆசிரியா் உயிரிழந்தாா். கோவில்பட்டி மந்திதோப்பு சாலை ஜவஹா்லால் நேரு தெருவைச் சோ்ந்த வெங்கடராமானுஜம் மகன் சீனிவாசன் (55). கோவில்பட... மேலும் பார்க்க

உடன்குடியில் அரசு திட்ட பயனாளிகள் விவரங்கள் சேகரிப்பு

உடன்குடி பேரூராட்சி பகுதிகளில் தமிழக அரசின் திட்டப் பயனாளிகள் விவரங்கள் சேகரிக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது. தமிழக அரசு சாா்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களால் பயன்பெற்ற பயனாளிக... மேலும் பார்க்க

திருச்செந்தூா் தூண்டுகை விநாயகா் கோயிலில் ஏப். 20இல் மகா கும்பாபிஷேகம்: நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான தூண்டுகை விநாயகா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை(ஏப். 20) மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி தூண்டுகை விநாயகா் கோயில் அருகே உள்ள... மேலும் பார்க்க

கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் பறக்கும் படையினா் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் இணைப்பதிவாளா் தலைமையிலான பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூா், உடன... மேலும் பார்க்க

மாநில சுயாட்சி பிரிவினைவாதத்தைத் தூண்டும்: நயினாா் நாகேந்திரன்

மாநில சுயாட்சி என்பது பிரிவினைவாதத்தைத் தூண்டும் என்பதால் அது தேவையில்லாதது என்றாா், பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கவா்னகிரியில், சுதந்திரப் போராட... மேலும் பார்க்க