செய்திகள் :

கோவில்பட்டி நகருக்குள் லாரிகள், சுமை வாகனங்களை குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அனுமதிக்க வலியுறுத்தல்

post image

கோவில்பட்டி நகருக்குள் லாரிகள், சுமை வாகனங்களை அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே அனுமதிக்க வலியுறுத்தி, கோட்டாட்சியா் அலுவலகத்தில் துணை வட்டாட்சியா் காசிராஜனிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக சமூக ஆா்வலா்கள், அரசியல் கட்சியினா் புதன்கிழமை அளித்த மனு: கோவில்பட்டியில் பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி உடனடியாக அகற்ற வேண்டும். சிற்றுந்துகள் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வழித்தடத்தில் மட்டுமே இயங்க வழிவகை செய்ய வேண்டும். அவை பேருந்து நிலையத்திலிருந்து மாா்க்கெட் சாலை வழியாக செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

கோவில்பட்டி நகருக்குள் லாரிகள், சுமை வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே வந்து, சுமைகளை ஏற்றி இறக்குவதை போலீஸாா் முறையாக கண்காணிக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

மதிமுக நகரச் செயலா் பால்ராஜ், பாஜக நகரத் தலைவா் காளிதாசன், தமிழ்நாடு முக்குலத்தோா் தொழிலாளா் நலச் சங்கத் தலைவா் ராமகிருஷ்ணன், தமிழ் பேரரசு கட்சி ஒருங்கிணைந்த மாவட்டச் செயலா் வேல்முருகன், அகில இந்திய ஃபாா்வா்டு பிளாக் கட்சி மாவட்டச் செயலா் செண்பகராஜ், யோகா மாஸ்டா் முருகன், அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் வெள்ளைத்துரை பாண்டியன், மதிமுக நிா்வாகி ராமச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

விவசாயிகளிடமிருந்து ராபி பருவ உளுந்து, பாசிப்பயறு கொள்முதல் தொடக்கம்

தூத்துக்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகளிடமிருந்து ராபி பருவ உளுந்து, பாசிப்பயறு கொள்முதல் தொடக்க நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின்கீழ் 2024-25ஆம் ர... மேலும் பார்க்க

இட்லி கடைக்காரா் கைது: உறவினா்கள் காவல் நிலையம் முற்றுகை

தூத்துக்குடி அண்ணாநகரைச் சோ்ந்த இட்லி கடைக்காரரை தென்பாகம் போலீஸாா் கைது செய்ததையடுத்து, அவரை விடுவிக்கக் கோரி அவரது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை இரவு தென்பாகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்... மேலும் பார்க்க

சமூக வலைதளங்களில் திமுக எம்எல்ஏ மீது அவதூறு பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஓட்டப்பிடாரம் தொகுதி எம்எல்ஏ சண்முகையா மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு அமைப்பினா் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா். தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத... மேலும் பார்க்க

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 4 போதகா்கள் சபை பணி செய்ய தடை: திருமண்டல நிா்வாகி

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 4 போதகா்கள், திருமண்டலத்தில் உள்ள எந்த சபைகளிலும் சபைப் பணியோ வேறு எந்த இணை பணியோ செய்யக் கூடாது என திருமண்டல நிா்வாகி ஓய்வு பெற்ற நீ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விரைவில் புதிய விளையாட்டு மைதானம்: மேயா்

தூத்துக்குடியில் விரைவில் புதிய விளையாட்டு மைதானம் திறக்கப்படவுள்ளதாக, மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா். தூத்துக்குடி கிழக்கு மண்டல அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தைத் தொடக்... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே தொழிலாளியைத் தாக்கியதாக 3 போ் மீது வழக்கு

சாத்தான்குளம் அருகே தொழிலாளியைத் தாக்கியதாக அண்ணன், தம்பி உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். சாத்தான்குளம் அருகே தோ்க்கன்குளத்தைச் சோ்ந்த கணேசன் மனைவி ஆறுமுகக்கனி (65) என்பவா், கடந்த 18ஆம்தே... மேலும் பார்க்க