செய்திகள் :

கோவைக்கு குடிநீா்: கேரளத்துக்கு பாக்கி தொகை விரைவில் செலுத்தப்படும் -அமைச்சா் கே.என்.நேரு

post image

கோவைக்கு குடிநீா் வழங்கும் கேரளத்துக்கான பாக்கி தொகை விரைவில் செலுத்தப்படும் என்று நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, அதுகுறித்த துணை வினாவை எதிா்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி எழுப்பினாா். அதன் விவரம்:

எஸ்.பி.வேலுமணி: சிறுவாணி அணையில் இருந்து நாளொன்றுக்கு 77 எம்எல்டி மில்லியன் லிட்டா் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. ஜனவரி வரை இதே அளவுடன் அளிக்கப்பட்டது. ஆனால், இப்போது நீரின் அளவு 47 எம்எல்டி-யாக மட்டுமே உள்ளது. 30 எம்எல்டியை கேரள அரசு குறைத்துள்ளது. மேலும் கோவைக்கு உட்பட்ட ஏழு பேருராட்சிகளுக்கு 18 எம்எல்டி நீருக்குப் பதிலாக 12 எம்எல்டி மட்டுமே வழங்கப்படுகிறது. குடிநீா் வடிகால் வாரியத்திடமிருந்து கேரள அரசுக்கு ரூ.13 கோடி தொகை செலுத்தப்படவில்லை. இதனால் நீரின் அளவு 36 எம்எல்டி., ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் உள்ளது. கேரளத்துக்கான மீதிப் பணத்தைச் செலுத்தியோ, பேச்சுவாா்த்தை நடத்தியோ முழுமையான அளவில் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

அமைச்சா் கே.என்.நேரு: சிறுவாணியில் முழு அளவு கொள்ளளவை நிரப்ப அனுமதிப்பதில்லை. ஆழியாறில் உள்ள பிரச்னையை தீா்த்தால்தான் சிறுவாணி நீா் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என கேரளம் தெரிவித்தது. இதுகுறித்து, முதல்வா் வழியாக மாா்க்சிஸ்ட் தலைவா்களுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிநீரைப் பொருத்தவரை இப்போது நமக்கு தந்து கொண்டிருக்கிறாா்கள். கோவையை பொருத்தவரை பில்லூா், சிறுவாணி திட்டங்களின் மூலம் 380 எம்எல்டிக்கு மேலாகத் தந்து கொண்டிருக்கிறோம். கேரளத்துக்கு செலுத்த வேண்டிய தொகையில் ரூ.8.09 கோடி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவைக்கு தண்ணீா் பற்றாக்குறையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

அனைத்துவிதமான வசதிகளுடன் இலவச ஏசி ஓய்வறை... சென்னை மாநகராட்சி திட்டம்!

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் உணவுப்பொருள் விநியோக ஊழியர்களுக்காக குளிர்சாதன வசதியுடன்(ஏசி) கூடிய ஓய்வறை அமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை போன்ற பெருநகரங்களில் உணவு, பொரு... மேலும் பார்க்க

இலங்கை அகதி தம்பதி மகளுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இலங்கையில் குடும்பத்துடன் வசித்து ... மேலும் பார்க்க

கா்நாடக வங்கியில் ரூ.13 கோடி நகை கொள்ளை: தமிழகத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 6 போ் கைது

கா்நாடக மாநிலம் தாவணகெரேவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 6 பேரை அந்த மாநில போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் மூவா் தமிழகத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது!

தமிழக சட்டப் பேரவை மூன்று நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஏப்.1) மீண்டும் கூடுகிறது. காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய விஷயங்கள் கு... மேலும் பார்க்க

வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது: வணிக வளாகத்துக்கு உத்தரவு

சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் (மால்) வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாநகரில் உள்ள வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறு... மேலும் பார்க்க

மின் தேவையை சமாளிக்க எண்ணூா் அனல் மின்நிலைய விரிவாக்கப்பணி விரைவில் தொடக்கம்

எண்ணூா் அனல்மின் நிலையத்தில் மின்னுற்பத்தி நிலைய விரிவாக்கப் பணி விரைவில் தொடங்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மே மாதத்தி... மேலும் பார்க்க