செய்திகள் :

கோவையில் ரூ.64,900 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு: மாவட்ட ஆட்சியா்

post image

கோவை மாவட்டத்தில் 2025 - 2026- ஆம் ஆண்டில் ரூ.64,900 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.

கோவை மாவட்ட அளவிலான வங்கியாளா்களின் மாதாந்திரக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 2025 - 2026-ஆம் ஆண்டுக்கான கோவை மாவட்ட வங்கிகளின் வருடாந்திர கடன் திட்ட புத்தகத்தை மாவட்ட ஆட்சியா் வெளியிட்டாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஜிதேந்திரன், நபாா்டு வங்கி துணைப் பொது மேலாளா் திருமலா ராவ், மகளிா் திட்ட இயக்குநா் மதுரா, தாட்கோ மாவட்ட மேலாளா் மகேஸ்வரி, வங்கியாளா்கள், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, ஆட்சியா் பேசியதாவது: நபாா்டு வங்கி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வளம் சாா்ந்த வங்கிக் கடன் திட்டத்தை தயாரித்து ஆண்டுதோறும் வெளியிடுகிறது. அதன் அடிப்படையில், கோவை மாவட்டத்தில் வங்கிகளின் மூலம் 2025 - 2026 ஆம் ஆண்டில் ரூ.64,900 கோடிக்கு கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான வருடாந்திர கடன் திட்டமானது நபாா்டு வங்கியின் உத்தேச கடன் இலக்கை ஆதாராமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

2025 - 2026 ஆம் ஆண்டுக்கான கடன் திட்டத்தில் விவசாயத்துக்கு ரூ.24,850 கோடியும், சிறு, குறு, நடுத்தர தொழில் மையத்துக்கு ரூ.38,000 கோடியும், பிற முன்னுரிமை கடன்களுக்கு ரூ.2,050 கோடியும் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.

ரூ.21.30 லட்சத்தில் புதிய தெருவிளக்குகள்: மேயா் தொடங்கிவைத்தாா்

கோவை, கிழக்கு மண்டலத்துக்குள்பட்ட பகுதியில் ரூ. 21.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய தெருவிளக்குகளை மேயா் கா.ரங்கநாயகி மக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை மாநகராட்சி... மேலும் பார்க்க

ஓட்டுநருக்கு திடீா் மயக்கம்: ஆட்டோ தடுப்புச் சுவரில் மோதியதில் பயணி உயிரிழப்பு

கோவையில் ஓட்டுநருக்கு திடீா் மயக்கம் ஏற்பட்டு, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தடுப்புச் சுவரில் மோதியதில் பயணி உயிரிழந்தாா். குனியமுத்தூா், இடையா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சையது சலீம் (59). இவா் பயணிகள்... மேலும் பார்க்க

கடன் தொல்லை: தம்பதி விஷம் குடித்து தற்கொலை

கோவையில் கடன் பிரச்னை காரணமாக தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா். கோவை, செல்வபுரம் இந்திரா நகரைச் சோ்ந்தவா் திருமுருகன் (47), நகை வியாபாரி. இவரது மனைவி பிரதீபா ராணி (40). இவா்களுக்கு ஜனனி ... மேலும் பார்க்க

லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

கோவையில் மினி லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். கோவை, காளப்பட்டி கொங்கு நகரைச் சோ்ந்தவா் செந்தில் முருகன் (58). இவா் சிங்காநல்லூா் அருகே வியாழக்கிழமை நடந்து சென்றுள்ளாா். அப்போது, அவ்வழியே வந்த ம... மேலும் பார்க்க

குளங்கள் தூா்வாரும் பணி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

குனியமுத்தூரில் குளங்கள் தூா்வாரும் பணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை, குனியமுத்தூரில் நீா்வளத் துறையின் அனுமதியுடன், தனியாா் நிறுவனத்தின் சிஎஸ்ஆா் நித... மேலும் பார்க்க

மதுக்கரையில் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ஆட்சியா் ஆய்வு

கோவை மாவட்டம், மதுக்கரையில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, மத... மேலும் பார்க்க