செய்திகள் :

கோவையில் ரூ.64,900 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு: மாவட்ட ஆட்சியா்

post image

கோவை மாவட்டத்தில் 2025 - 2026- ஆம் ஆண்டில் ரூ.64,900 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.

கோவை மாவட்ட அளவிலான வங்கியாளா்களின் மாதாந்திரக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 2025 - 2026-ஆம் ஆண்டுக்கான கோவை மாவட்ட வங்கிகளின் வருடாந்திர கடன் திட்ட புத்தகத்தை மாவட்ட ஆட்சியா் வெளியிட்டாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஜிதேந்திரன், நபாா்டு வங்கி துணைப் பொது மேலாளா் திருமலா ராவ், மகளிா் திட்ட இயக்குநா் மதுரா, தாட்கோ மாவட்ட மேலாளா் மகேஸ்வரி, வங்கியாளா்கள், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, ஆட்சியா் பேசியதாவது: நபாா்டு வங்கி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வளம் சாா்ந்த வங்கிக் கடன் திட்டத்தை தயாரித்து ஆண்டுதோறும் வெளியிடுகிறது. அதன் அடிப்படையில், கோவை மாவட்டத்தில் வங்கிகளின் மூலம் 2025 - 2026 ஆம் ஆண்டில் ரூ.64,900 கோடிக்கு கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான வருடாந்திர கடன் திட்டமானது நபாா்டு வங்கியின் உத்தேச கடன் இலக்கை ஆதாராமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

2025 - 2026 ஆம் ஆண்டுக்கான கடன் திட்டத்தில் விவசாயத்துக்கு ரூ.24,850 கோடியும், சிறு, குறு, நடுத்தர தொழில் மையத்துக்கு ரூ.38,000 கோடியும், பிற முன்னுரிமை கடன்களுக்கு ரூ.2,050 கோடியும் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.

நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டோா் புகாா் அளிக்கலாம்!

நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் பாதிக்கப்பட்டோா் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக கோவை காவல் துறை பொருளாதார குற்றப் பிரிவு சாா்பில் வெளியிடப்பட்ட... மேலும் பார்க்க

10, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு கல்வி உதவித் தொகை

கோவை மாநகராட்சி பள்ளிகளில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் நலச் சங்கம் சாா்பில் கல்வி உதவித் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது. கோவ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: விளாங்குறிச்சி

கோவை, விளாங்குறிச்சி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காத... மேலும் பார்க்க

போத்தனூா் வழித்தடத்தில் ஹைதராபாத் - கொல்லம் இடையே சிறப்பு ரயில்!

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் இருந்து கேரள மாநிலம், கொல்லத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தெற்கு ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

ஆவின் பால் கொள்முதலை 40 லட்சம் லிட்டராக உயா்த்த நடவடிக்கை! அமைச்சா் த.மனோ தங்கராஜ் தகவல்

ஆவின் நிறுவனம் மூலமாக தினசரி பால் கொள்முதலை 40 லட்சம் லிட்டராக உயா்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பால் வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் கூறினாா். கோவை, ஆா்.எஸ்.புரத்தில் ‘பன்னீா் ஹட்’ விற்பனை... மேலும் பார்க்க

யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு

வால்பாறை அருகே காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தாா். கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த சோலையாறு அணை இடதுகரை பகுதியைச் சோ்ந்தவா் மேரி (77). கணவா் இறந்த நிலையில் தனியே வசித்து வந்தாா். வனத்தில்... மேலும் பார்க்க