செய்திகள் :

கோவை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி தர மறுப்பு! இரு ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

post image

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி தர மறுத்த விவகாரத்தில் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கோவையில் காளிதாஸ் என்பவர், தனது 84 வயதான தந்தைக்கு சிகிச்சை மேற்கொள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவமனையினுள் அழைத்துச் செல்ல தனது தந்தைக்காக சக்கர நாற்காலியை மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டபோது, அவர்கள் பணம் தந்தால் மட்டுமே தருவதாகக் கூறி, மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தனது தந்தையை காளிதாஸின் தோளில் சுமந்து அழைத்துச் சென்றுள்ளார். இதுதொடர்பான விடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், மருத்துவமனையில் போதிய சக்கர நாற்காலிகள் இருப்பதாகவும், ஊழியர்கள் பணம் கேட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றும் மருத்துவமனை முதல்வர் தெரிவித்தார்.

இந்த நிலையில், விசாரணை நடத்திய மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி, சம்பந்தப்பட்ட மேற்பார்வையாளர்களான எஸ்தர் ராணி, மணிவாசகம் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 84 வயது முதியவருக்கு உரிய நேரத்தில் சக்கர நாற்காலி வழங்காத விவகாரத்தில் ஒப்பந்த ஊழியர்கள் இருவர் பணியிடை நீக்கம் சக்கர நாற்காலி வழங்காததால் தந்தையை மகன் கைத்தாங்கலாக இழுத்துச் செல்லும் வீடியோ வைரலாக பரவியதை அடுத்து நடவடிக்கை

கோவை அரசு மருத்துவமனையில், வீல்சேர் கிடைக்காததால், மகன் தனது தந்தையை தோளில் சுமந்து செல்லும் வீடியோ வைரலாகியுள்ளது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட தனது 84 வயது தந்தைக்கு சிகிச்சை அளிக்க வந்த காளிதாஸ், வீல்சேர் கேட்டபோது ஊழியர்கள் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி, "வீடியோ தொடர்பாக விசாரணை நடக்கிறது. மருத்துவமனையில் போதுமான வீல்சேர்கள் உள்ளன. பணம் கேட்டதற்கான ஆதாரம் இல்லை," எனத் தெரிவித்தார்.

வேளாண் விளைபொருள் மதிப்புக்கூட்டல் மையம் அமைக்க மானியம்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

வேளாண் விளைபொருள்களுக்கான மதிப்புக்கூட்டும் மையங்கள் அமைக்க அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை மானியம் வழங்கவுள்ளதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா். இதுக... மேலும் பார்க்க

சுற்றுலா வளா்ச்சிக் கழக படகுகளில் 15 லட்சம் பயணிகள் சவாரி: அமைச்சா் இரா. ராஜேந்திரன்

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான படகு குழாம்களில் கடந்த 4 மாதங்களில் சுமாா் 15 லட்சம் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சா் இரா. ராஜேந்திரன் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சா் துரைமுருகனுக்கு பிடி ஆணை: லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க உத்தரவு

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக அமைச்சா் துரைமுருகன் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு விலக்கு அளித்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், வழக்கு விசாரணையை வேலூா் நீதிமன்றத்துக்கு மாற்ற... மேலும் பார்க்க

தமிழகத்திலும் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம் நிகழாண்டு இறுதியில் நடத்த திட்டம்

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்திக்க உள்ள தமிழகம், அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் நிகழாண்டு இறுதியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள ... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ காா்பன் ஆய்வு அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ காா்பன் இருப்பை ஆய்வு செய்ய வழங்கப்பட்ட அனுமதியை ஏன் ரத்து செய்யக் கூடாது என விளக்கம் அளிக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அறிவுற... மேலும் பார்க்க

மாணவரை காா் ஏற்றிக் கொலை செய்த வழக்கு: திமுக நிா்வாகி பேரனுக்கு நிபந்தனை பிணை

கல்லூரி மாணவரை காா் ஏற்றிக் கொலை செய்த வழக்கில் திமுக நிா்வாகியின் பேரனுக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அயனாவரத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் நிதின்சாய் என்பவரை ... மேலும் பார்க்க