செய்திகள் :

கோவை: திமுக மாநகர மாவட்டச் செயலாளர் மாற்றமா? - பின்னணி என்ன?

post image

கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் கோவை கார்த்திக்கின் கட்சி பொறுப்பை தி.மு.க தலைமை அதிரடியாக பறித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் பின்னணி குறித்து கோவை மாவட்ட திமுகவினரிடம் விசாரித்தோம்.

"கோவை உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் திமுக மிகவும் பின் தங்கியே இருக்கிறது. இதனால்தான், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ஐந்து மாவட்டமாக கழகமாக இருந்த திமுக அமைப்பை மூன்றாக மாற்றி, முக்கியமான நபர்களுக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன்படிதான், கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளராக கோவை நா. கார்த்திக் நியமிக்கப்பட்டார்.

ஆனாலும், கோவையில் திமுக-வால் வெற்றிப் பெறமுடியவில்லை. இதையடுத்து, திமுக ஆட்சிக்கு வந்தபிறகு கோவை மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டார்.

கார்த்திக்

தொடர்ந்து நடந்த உள்ளாட்சி அமைப்புகளில் திமுக நல்ல வெற்றியை பெற்றது. அப்போதிருந்தே கோவை கார்த்திக்கும் செந்தில் பாலாஜிக்கும் சுமுகமான உறவு இல்லை. மாறாக இருவருமே எதிர் அரசியலில் ஈடுபட தொடங்கினர். இந்தநிலையில்தான், பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறை சென்றார் செந்தில் பாலாஜி.

அவர் சிறையில் இருந்தபோதும் கோவை மாவட்ட நிர்வாகிகள் கட்சி நிகழ்ச்சியின்போது செந்தில் பாலாஜியின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டரைதான் ஒட்டினர். ஆனால், கோவை கார்த்திக் தனது மாவட்ட கழக நிகழ்ச்சியில் செந்தில் பாலாஜியின் போட்டோவோ பெயரையோ பயன்படுத்துவே இல்லை. தொடர்ந்து அமைச்சர் பதவியை இழந்த செந்தில் பாலாஜி, கோவைக்கு இன்னும் பொறுப்பாளராகவே இருக்கிறார். ஆனால், அவருடன் கார்த்திக் ஒருவித மோதல் போக்கையே கடைபிடித்து வந்தார். இந்தநிலையில், ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் நடந்த உறுப்பினர் சேர்க்கையிலும் கார்த்திக் சரியாக செயல்படவில்லை.

செந்தில் பாலாஜியுடன் துரை.செந்தமிழ்ச்செல்வன்

சீனியர்கள் முதல் ஜூனியர்கள் வரை எல்லா நிர்வாகிகளையும் அரவணைத்து செல்லாமல், எதிர் அரசியலையே செய்து வந்தார். அதேபோல, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அவர் செய்யும் ஒரு கட்டட பணியிலேயே முழு கவனத்தை செலுத்தினார். எனவேதான், அவரை வைத்துக் கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க முடியாது என்று மண்டல பொறுப்பாளரான செந்தில் பாலாஜி மேலிடத்துக்கு புகாராக அனுப்பியிருந்தார். அதன்படியே, அவரின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, பீளமேடு பகுதி - 1 செயலாளராக இருக்கும் துரை.செந்தமிழ்ச்செல்வனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வயதுகுறைவான செந்தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளர்." என்றனர் விரிவாக.

'டெல்லி'க்கு பயம்காட்டும் EPS-ன் PLAN B , ரூட் மாறும் Amit shah?! | Elangovan Explains

'அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக' என மெகா கூட்டணிக்கு முயற்சிக்கும் எடப்பாடி. அது இயலாதபட்சத்தில், காங்,தவெக வைத்து Plan B திட்டம் வைத்துள்ளார். ஏனெனில் செங்கோட்டையன், டிடிவி, ஓபிஎஸ் வைத்து தொடர்ந்து குடை... மேலும் பார்க்க

புதுச்சேரி: `ஊழல் அரசு துாக்கியெறியப்பட வேண்டும்!’ - பாஜக ஆதரவு எம்எல்ஏ பேச்சால் ரங்கசாமி அப்செட்

என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணிக்குள் விரிசல்புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அமைச்சரான பா.ஜ.க எம்.எல்.ஏ ஜான்குமார்... மேலும் பார்க்க

Ladakh violence: போராட்டம் வன்முறையாக வெடித்ததற்கு யார் காரணம்; மத்திய அரசின் அறிக்கை சொல்வதென்ன?

ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்த லடாக்கை, மத்திய பாஜக அரசு 2019-ல் அம்மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி, சட்டமன்றமில்லாத யூனியன் பிரதேசமாக மாற்றியது.இதனால், லடாக்கின் நீண்டநாள் கோரிக்கையான மாநில... மேலும் பார்க்க

லடாக் போராட்டம்: "சர்வாதிகார பாஜக-வால் முழு நாட்டுக்குமான போராட்டமாக மாறும்" - கெஜ்ரிவால் எச்சரிக்கை

பாஜக தலைமையிலான மத்திய அரசால் 2019-ல், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து (அரசியலமைப்பு பிரிவு 370) நீக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டன.இதில், ஜ... மேலும் பார்க்க

"மாண்பில்லாத இபிஎஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்" - செல்வப்பெருந்தகை விவகாரத்தில் கொதிக்கும் காங்கிரஸ்

'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்கள... மேலும் பார்க்க