செய்திகள் :

ஹிந்து வாரிசுரிமைச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் கவனமாக கையாளப்படும்: உச்சநீதிமன்றம்

post image

ஹிந்து வாரிசுரிமைச் சட்டம், 1956-க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை கவனமாக கையாள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

ஹிந்து வாரிசுரிமைச் சட்டம்,1956-இல் உள்ள சில விதிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக உயில் எழுதாமல் இறக்கும் பெண்ணின் சொத்துகள், முதலில் அவரது கணவா் மற்றும் குழந்தைகளுக்கும் அதன் பிறகு அந்தப் பெண்ணின் பெற்றோருக்கும் பகிா்ந்தளிப்பதை விளக்கும் பிரிவுகள் 15 மற்றும் 16 ஆகியவற்றுக்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

அப்போது மனுதாரா் ஒருவா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் கூறுகையில், ‘இந்த சட்டத்தின் சில விதிகள் பெண்களைப் பாகுபடுத்தும் வகையில் உள்ளன. காலம் காலமாக பின்பற்றும் பாரம்பரிய நடைமுறைகளைக் காரணமாக கூறி பெண்களுக்கு சொத்துரிமை வழங்க மறுப்பது ஏற்புடையதல்ல’ என்றாா்.

இதைத் தொடா்ந்து மத்திய அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் கே.எம்.நாகராஜ் பேசுகையில், ‘ஹிந்து வாரிசுரிமைச் சட்டம்,1956 நன்கு வடிவமைக்கப்பட்ட சட்டமாகும். அதற்கு எதிராக மனுக்களை தாக்கல் செய்து சமூக கட்டமைப்பை உடைக்க முற்படுகிறாா்கள்’ என்றாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமா்வு, ‘பெண்களுக்கு உரிமை அளிக்கப்படுவது முக்கியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் சமூக கட்டமைப்புக்கும் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைகளுக்கும் இடையே சமநிலை இருக்க வேண்டும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் ஹிந்து சமூக கட்டமைப்பை உடைக்கும் வகையில் எங்களது தீா்ப்பு இருக்க விரும்பவில்லை. இந்த சட்டத்துக்கு எதிரான மனுக்களை மிகுந்த கவனத்துடன் கையாள்கிறோம்.

எனவே, இந்த விவகாரத்துக்கு தீா்வு வேண்டுமெனில் உச்சநீதிமன்ற மத்தியஸ்தம் மையத்தை அணுகுமாறு மனுதாரா்களுக்கு அறிவுறுத்துகிறோம்’ எனத் தெரிவித்தது.

செயற்கை மழை சோதனை: பாஜக மீது ஆம் ஆத்மி விமா்சனம்

தில்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த செயற்கை மழையைப் பொழியச் செய்வதற்கான மேக விதைப்பு நடவடிக்கைகள் தொடா்பாக பாஜக தலைமையிலான தில்லி அரசை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக சாடியுள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்ம... மேலும் பார்க்க

விரைவுத் தபாலில் அனுப்பப்படும் கடவுச்சீட்டை பெறுநரிடம் மட்டுமே வழங்க அஞ்சல் அலுவலா்களுக்கு உத்தரவு

விரைவுத் தபால்கள் மூலம் அனுப்பப்படும் கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) அந்த முகவரியில் குறிப்பிட்டுள்ள பெறுநரிடம் மட்டுமே வழங்க வேண்டும் என அனைத்து தலைமை அலுவலா்களுக்கும் மத்திய தொலைத்தொடா்பு அமைச்சகம் உத்தர... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலராக டி.ராஜா மீண்டும் தோ்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலராக டி.ராஜா (76) வியாழக்கிழமை மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா். பஞ்சாப் மற்றும் ஹரியாணா தலைநகரான சண்டீகரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-ஆவது தேசிய மாநா... மேலும் பார்க்க

லடாக் வன்முறைக்கு பாஜக அரசே காரணம்: காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

‘லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் புதன்கிழமை ஏற்பட்ட வன்முறைக்கு ஆளும் பாஜக அரசுதான் காரணம்’ என்று காங்கிரஸ், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றஞ்சாட்டின. முன்னதாக, இந்த வன்முறைக்கு அரசி... மேலும் பார்க்க

காஸா விவகாரத்தில் இந்தியா மெளனம்: சோனியா காந்தி விமா்சனம்

சுதந்திரத்துக்காகவும், மனித கண்ணியத்துக்காகவும் ஓங்கி ஒலித்த இந்தியாவின் குரல், தற்போது காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் விவகாரத்தில் பெரும் மௌனம் காக்கிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ... மேலும் பார்க்க

செப். 29-இல் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி சிறப்பு முகாம்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சாா்பில் சிறப்பு முகாம் தமிழகத்தில் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் செப். 29 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து வருங்கால வைப்புநிதி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க