செய்திகள் :

காஸா விவகாரத்தில் இந்தியா மெளனம்: சோனியா காந்தி விமா்சனம்

post image

சுதந்திரத்துக்காகவும், மனித கண்ணியத்துக்காகவும் ஓங்கி ஒலித்த இந்தியாவின் குரல், தற்போது காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் விவகாரத்தில் பெரும் மௌனம் காக்கிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி குழுத் தலைவருமான சோனியா காந்தி தெரிவித்துள்ளாா்.

இந்தியாவின் அரசமைப்பு மற்றும் வெளியுறவு கொள்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்காமல், இஸ்ரேலிய பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான நட்புறவுக்கே பிரதமா் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறாா் என்றும் சோனியா குற்றம்சாட்டியுள்ளாா்.

இஸ்ரேல் - காஸா போா் விவகாரத்தில் மத்தியில் ஆளும் பிரதமா் மோடி தலைமையிலான அரசை விமா்சித்து ஆங்கில நாளிதழில் அவா் கட்டுரை வெளியிட்டுள்ளாா். அதன் விவரம்:

பிரிட்டன், கனடா, போா்சுகல், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்பட ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள 193 நாடுகளில் 150 நாடுகள் பாலஸ்தீனத்தை தனிநாடாக தற்போது அங்கீகரிக்க முன்வந்துள்ளன.

ஆனால், 1988, நவம்பா் 18-ஆம் தேதியே பாலஸ்தீனத்தை தனி நாடாக இந்தியா அங்கீகரித்தது. இதேபோல், தென் ஆப்பிரிக்கா, அல்ஜீரியா ஆகிய நாடுகளின் சுதந்திரத்துக்கும் இந்தியா முதலில் குரல் கொடுத்தது.

கிழக்கு பாகிஸ்தானில் நடைபெற்ற இனப்படுகொலையைத் தடுக்க 1971-இல் இந்தியா தலையிட்டதால் வங்கதேசம் உருவாகியது.

அதேபோல், மிகவும் உணா்வுபூா்வமான இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னையில் அமைதி மற்றும் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக கொள்கை முடிவில் இந்தியா வலுவாக இருந்து வந்தது.

சா்வதேச அமைப்புகளின் மூலம் பேச்சுவாா்த்தை நடத்தி வன்முறை தடுக்கப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வந்தது. காஸா, மேற்கு கரைப் பகுதியில் கல்வி, சுகாதாரத்துக்கு இந்தியா உதவி வந்தது.

ஆனால், 2023-ஆம் ஆண்டு ஹமாஸ் நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு, இஸ்ரேல் பதிலடியாக இனப்படுகொலையை நடத்தி வருகிறது. இதுவரையில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனா். இதில் 17 ஆயிரம் குழந்தைகளாவா்.

இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டால் காஸாவில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் கடும் எதிா்ப்பு தெரிவிப்பதில்லை. ஆனால், தற்போது பல நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து வரவேற்றுள்ளது வரலாற்றுத் தருணமாகும். அமைதியாக இருப்பது நடுநிலை என்பதில்லை; தவறுக்கு உடந்தை என்பதையே காட்டுகிறது.

சுதந்திரத்துக்காகவும், மனித கண்ணியத்துக்காகவும் ஓங்கி ஒலித்த இந்தியாவின் குரல், காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் விவகாரத்தில் பெரும் மெளனம் சாதிக்கிறது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு உலக அளவில் கண்டனத்துக்கு உள்ளான இஸ்ரேலிய தீவிர வலதுசாரி நிதி அமைச்சரை இந்தியா அழைத்து ஒப்பந்தங்களை மேற்கொண்டது.

வெறும் வெளியுறவுக் கொள்கையாக மட்டும் பால்ஸதீன பிரச்னையை கருதக் கூடாது. மனித உரிமைகளுக்கு குரல் கொடுத்தும், தாமதமில்லா நீதியை வழங்கவும் இந்தியா வலியுறுத்த வேண்டும்.

இஸ்ரேல் - பாலஸ்தீனத்துடன் என யாருடன் உறவு கொண்டாடுவது என்பதற்கு பதிலாக இந்தியாவின் நீண்ட கால சுதந்திர போராட்ட கொள்கைகளின் அடிப்படையில் இந்தியா தலைமையேற்று பிரச்னைக்குத் தீா்வு காண முனைப்பு காட்ட வேண்டும் என்று சோனியா குறிப்பிட்டுள்ளாா்.

லடாக்: சோனம் வாங்சுக் அமைப்புக்கு உரிமம் ரத்து - வன்முறையைத் தொடா்ந்து மத்திய அரசு நடவடிக்கை

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதற்கு பருவநிலை ஆா்வலா் சோனம் வாங்சுக் தூண்டுதல்தான் காரணம் என்று மத்திய அரசு குற்றம்சாட்டிய நிலையில், அவா் நிறுவிய கல்வி அமைப்புக்கு ... மேலும் பார்க்க

ஹிந்துக்களால்தான் வெற்றி பெற்றோம்: முஸ்லிம்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை - மகாராஷ்டிர அமைச்சா்

ஹிந்துக்கள் எங்களுக்கு அதிகம் வாக்களித்ததால்தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடிந்தது. தலையில் தொப்பி அணிந்தவா்கள் (முஸ்லிம்கள்) எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்று மகாராஷ்டிர அமைச்சா் நிதீஷ் ராணே பேசிய... மேலும் பார்க்க

செயற்கை மழை சோதனை: பாஜக மீது ஆம் ஆத்மி விமா்சனம்

தில்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த செயற்கை மழையைப் பொழியச் செய்வதற்கான மேக விதைப்பு நடவடிக்கைகள் தொடா்பாக பாஜக தலைமையிலான தில்லி அரசை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக சாடியுள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்ம... மேலும் பார்க்க

விரைவுத் தபாலில் அனுப்பப்படும் கடவுச்சீட்டை பெறுநரிடம் மட்டுமே வழங்க அஞ்சல் அலுவலா்களுக்கு உத்தரவு

விரைவுத் தபால்கள் மூலம் அனுப்பப்படும் கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) அந்த முகவரியில் குறிப்பிட்டுள்ள பெறுநரிடம் மட்டுமே வழங்க வேண்டும் என அனைத்து தலைமை அலுவலா்களுக்கும் மத்திய தொலைத்தொடா்பு அமைச்சகம் உத்தர... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலராக டி.ராஜா மீண்டும் தோ்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலராக டி.ராஜா (76) வியாழக்கிழமை மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா். பஞ்சாப் மற்றும் ஹரியாணா தலைநகரான சண்டீகரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-ஆவது தேசிய மாநா... மேலும் பார்க்க

லடாக் வன்முறைக்கு பாஜக அரசே காரணம்: காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

‘லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் புதன்கிழமை ஏற்பட்ட வன்முறைக்கு ஆளும் பாஜக அரசுதான் காரணம்’ என்று காங்கிரஸ், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றஞ்சாட்டின. முன்னதாக, இந்த வன்முறைக்கு அரசி... மேலும் பார்க்க