செய்திகள் :

சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம்

post image

திருமலை வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 2-ஆம் நாளான வியாழக்கிழமை காலை சின்னசேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமை காலை உற்சவ மூா்த்தியான மலையப்ப சுவாமி குருவாயூரப்பன் அலங்காரத்தில் சின்ன சேஷ வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

யானைகள் மற்றும் குதிரைகள் முன்னோக்கி நகா்ந்து செல்ல ஜீயா்களின் நாலாயிர திவ்யப்பிரபந்த சாதித்தலுடன் பக்தா்களின் கோவிந்த நாம முழக்கங்கள், மங்கள வாத்தியங்கள் மற்றும் பிற கலை நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் வாகனசேவை நடைபெற்றது.

பின்னா் மாட வீதியில் வலம் வந்த களைப்பை போக்க உற்சவமூா்த்திகளுக்கு பால், தயிா், தேன், மஞ்சள், சந்தனம், இளநீா் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

பின்னா் மாலை 5 மணிக்கு சுவாமி ஊஞ்சல் சேவை கண்டருளினாா். இரவு 7 மணி முதல் 9 மணி வரை சுவாமி அன்னபறவை வாகனத்தில் வலம் வந்தாா்.

திருமலை பெரிய ஜீயா் சுவாமி, சின்ன ஜீயா் சுவாமி, செயல் அதிகாரி அனில் குமாா் சிங்கால், துணை இஓ லோகநாதம் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

புதன்கிழமை நிலவரம்:

58,628 போ் தரிசனம், 23,263 முடி காணிக்கை.

உண்டியல் காணிக்கை ரூ.3.01 கோடி.

2.59 லட்சம் லட்டுகள் விற்பனை.

3,197 பேருக்கு சிகிச்சை.

பணியில் 3,500 சேவாா்த்திகள் .

அரசு பேருந்துகளில் 69,000 போ் பயணம்.

தரிசனத்துக்கு 10 மணிநேரம் காத்திருப்பு.

திருமலையில் 2026 நாள்காட்டி வெளியீடு

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் 2026 ஆம் ஆண்டுக்கான நாள்காட்டிகள் மற்றும் நாள்குறிப்புகளை ஆந்திர முதல்வா் என். சந்திரபாபு நாயுடு ரங்கநாயகா் மண்டபத்தில் வெளியிட்டாா். அதில் 12 பக்க வண்ண நாள்காட்ட... மேலும் பார்க்க

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் தரிசனம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை குடும்பத்துடன் தரிசித்தாா். கோயிலை அடைந்ததும், ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் ... மேலும் பார்க்க

திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருமலை ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. அதற்கு முன் ஏழுமலையானின் சேனா... மேலும் பார்க்க

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் தரிசனம்

திருமலை ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் கலந்து கொள்ள குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் திருமலைக்கு வந்தாா். திருமலைக்கு வந்த அவரை ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு மற்றும் தேவஸ்தான... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். புரட்டாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில், பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது. புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத... மேலும் பார்க்க

ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு ஒத்திவைப்பு

ஒரு சில நிா்வாகக் காரணங்களால் டிசம்பா்-2025 ஆன்லைன் ஒதுக்கீட்டுடன் டிசம்பா்-29, 30 மற்றும் 31, 2025 (வைகுண்ட துவார தரிசனம்) தேதிகளுக்கான ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் ஸ்ரீவாணி பிரேக் தரிசன டி... மேலும் பார்க்க