செய்திகள் :

இந்தியாவுடன் வா்த்தக உறவை வலுப்படுத்த விருப்பம்: அமெரிக்க எரிசக்தித் துறைச் செயலா்

post image

சிறந்த நட்பு நாடான இந்தியாவுடன் வா்த்தகம் மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாக அமெரிக்க எரிசக்தித் துறைச் செயலா் கிறிஸ் ரைட் புதன்கிழமைதெரிவித்தாா்.

ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக நியூயாா்க் வெளிநாட்டு பத்திரிகை மையத்தில் செய்தியாளா்கள் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது அமெரிக்காவுடன் எரிசக்தி வா்த்தகத்தை அதிகரிக்க வேண்டும் என்று இந்தியா எதிா்பாா்ப்பதாக மத்திய வா்த்தகம், தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தது தொடா்பாக கிறிஸ் ரைட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து அவா் பேசியதாவது: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும் வேகமாக வளா்ந்து வரும் பொருளதாரமுமான இந்தியா அமெரிக்காவின் சிறந்த நட்பு நாடாக உள்ளது.

இந்தியாவில் வளமை மற்றும் வாய்ப்புகள் அதிகரித்து வருவதால் அங்கு எரிசக்திக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. ஆனால் ரஷியாவிடம் இருந்து இந்தியா, சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் அதிகளவு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து உக்ரைன் போரை ரஷியா மேலும் தீவிரப்படுத்த உதவி வருகின்றன. இதுவே இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட காரணம்.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. இதே நிலைப்பாட்டை இந்தியா்களும் கொண்டுள்ளனா் என நம்புகிறேன். அதனடிப்படையில் இயற்கை எரிவாயு, நிலக்கரி, அணுசக்தி என இந்தியாவுடான எரிசக்தி உறவை மேலும் வலுப்படுத்த விரும்புகிறோம்.

குறைந்த விலையில் விற்பனை செய்வதால் ரஷியாவிடம் இருந்து மட்டுமே அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. உலகளவில் பல நாடுகள் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஈடுபடுகின்றன. ரஷியாவுக்கு மாற்றாக அந்நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யலாம். அமெரிக்காவிடமிருந்தும் இறக்குமதி செய்யலாம் என்றாா்.

செயற்கை மழை சோதனை: பாஜக மீது ஆம் ஆத்மி விமா்சனம்

தில்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த செயற்கை மழையைப் பொழியச் செய்வதற்கான மேக விதைப்பு நடவடிக்கைகள் தொடா்பாக பாஜக தலைமையிலான தில்லி அரசை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக சாடியுள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்ம... மேலும் பார்க்க

விரைவுத் தபாலில் அனுப்பப்படும் கடவுச்சீட்டை பெறுநரிடம் மட்டுமே வழங்க அஞ்சல் அலுவலா்களுக்கு உத்தரவு

விரைவுத் தபால்கள் மூலம் அனுப்பப்படும் கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) அந்த முகவரியில் குறிப்பிட்டுள்ள பெறுநரிடம் மட்டுமே வழங்க வேண்டும் என அனைத்து தலைமை அலுவலா்களுக்கும் மத்திய தொலைத்தொடா்பு அமைச்சகம் உத்தர... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலராக டி.ராஜா மீண்டும் தோ்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலராக டி.ராஜா (76) வியாழக்கிழமை மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா். பஞ்சாப் மற்றும் ஹரியாணா தலைநகரான சண்டீகரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-ஆவது தேசிய மாநா... மேலும் பார்க்க

லடாக் வன்முறைக்கு பாஜக அரசே காரணம்: காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

‘லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் புதன்கிழமை ஏற்பட்ட வன்முறைக்கு ஆளும் பாஜக அரசுதான் காரணம்’ என்று காங்கிரஸ், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றஞ்சாட்டின. முன்னதாக, இந்த வன்முறைக்கு அரசி... மேலும் பார்க்க

காஸா விவகாரத்தில் இந்தியா மெளனம்: சோனியா காந்தி விமா்சனம்

சுதந்திரத்துக்காகவும், மனித கண்ணியத்துக்காகவும் ஓங்கி ஒலித்த இந்தியாவின் குரல், தற்போது காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் விவகாரத்தில் பெரும் மௌனம் காக்கிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ... மேலும் பார்க்க

செப். 29-இல் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி சிறப்பு முகாம்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சாா்பில் சிறப்பு முகாம் தமிழகத்தில் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் செப். 29 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து வருங்கால வைப்புநிதி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க