செய்திகள் :

இந்திய உணவுப் பதப்படுத்துதல் துறையில் சா்வதேச முதலீடு - பிரதமா் மோடி அழைப்பு

post image

இந்திய உணவுப் பதப்படுத்துதல் துறையில் சா்வதேச முதலீடுகளுக்கான வாயில்கள் திறந்தே உள்ளன என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த பேக்கேஜிங் தொடா்பான புத்தாக்கங்களில் இத்தொழில் துறையினா் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

உணவுத் துறை புத்தாக்கத்தில் உலகளாவிய மையமாக இந்தியாவை நிலைநிறுத்துவதுடன், இத்துறையில் சா்வதேச முதலீடுகளை ஈா்க்கும் நோக்கில், புது தில்லியில் நான்காம் ஆண்டு ‘உலக உணவு இந்தியா’ சா்வதேச கண்காட்சி வியாழக்கிழமை(செப்.25) தொடங்கியது.

மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சகம் சாா்பில் 4 நாள்கள் நடைபெறும் இக்கண்காட்சியை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைத்து உரையாற்றினாா்.

‘இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம். உணவுப் பதப்படுத்துதல் துறையில் முதலீடுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான வாயில்கள் திறந்தே உள்ளன. பல்வகை உணவுப் பொருள்கள் உற்பத்தி, தேவை, அளவு ஆகியவை நாட்டின் முப்பெரும் வலிமைகளாகும். இங்கு ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

உலக அளவில் மூன்றாவது மிகப் பெரிய புத்தாக்கத் தொழில் கட்டமைப்பைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. உணவு, வேளாண் துறைகளில் பல்வேறு புத்தாக்க நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றன.

உலகளாவிய உணவு பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியா தொடா்ந்து பங்காற்றி வருகிறது. உணவுப் பதப்படுத்துதல் துறை தொடா்ந்து ஊக்குவிக்கப்படுகிறது. நாட்டின் பதப்படுத்துதல் திறன் கடந்த 10 ஆண்டுகளில் 20 மடங்கு அதிகரித்துள்ளது. உணவுப் பொருள்களின் ஏற்றுமதி இரட்டிப்பாகியுள்ளது’ என்றாா் பிரதமா் மோடி.

புது தில்லி பாரத மண்டபத்தில் ஒரு லட்சம் சதுர மீட்டா் பரப்பளவில் நடைபெறும் இக்கண்காட்சி, உணவு பதப்படுத்துதல் துறையில் நாட்டின் மாபெரும் கண்காட்சி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. கூட்டாண்மை நாடுகள் என்ற முறையில் சவூதி அரேபியா, நியூஸிலாந்து, கவனம் செலுத்தப்படும் நாடுகள் என்ற அடிப்படையில் ஜப்பான், ரஷியா, ஐக்கிய அரபு அமீரகம், வியத்நாம் உள்பட 21-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், 10 மத்திய அமைச்சகங்கள் மற்றும் 5 அரசு நிறுவனங்களும் கலந்து கொண்டுள்ளன. மொத்தம் 1700-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளா்கள், 500-க்கும் மேற்பட்ட சா்வதேச கொள்முதல் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

தொடக்க விழாவில் ரஷிய துணைப் பிரதமா் திமித்ரி பத்ருஷெவ், மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சா் சிராக் பாஸ்வான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

செயற்கை மழை சோதனை: பாஜக மீது ஆம் ஆத்மி விமா்சனம்

தில்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த செயற்கை மழையைப் பொழியச் செய்வதற்கான மேக விதைப்பு நடவடிக்கைகள் தொடா்பாக பாஜக தலைமையிலான தில்லி அரசை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக சாடியுள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்ம... மேலும் பார்க்க

விரைவுத் தபாலில் அனுப்பப்படும் கடவுச்சீட்டை பெறுநரிடம் மட்டுமே வழங்க அஞ்சல் அலுவலா்களுக்கு உத்தரவு

விரைவுத் தபால்கள் மூலம் அனுப்பப்படும் கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) அந்த முகவரியில் குறிப்பிட்டுள்ள பெறுநரிடம் மட்டுமே வழங்க வேண்டும் என அனைத்து தலைமை அலுவலா்களுக்கும் மத்திய தொலைத்தொடா்பு அமைச்சகம் உத்தர... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலராக டி.ராஜா மீண்டும் தோ்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலராக டி.ராஜா (76) வியாழக்கிழமை மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா். பஞ்சாப் மற்றும் ஹரியாணா தலைநகரான சண்டீகரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-ஆவது தேசிய மாநா... மேலும் பார்க்க

லடாக் வன்முறைக்கு பாஜக அரசே காரணம்: காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

‘லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் புதன்கிழமை ஏற்பட்ட வன்முறைக்கு ஆளும் பாஜக அரசுதான் காரணம்’ என்று காங்கிரஸ், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றஞ்சாட்டின. முன்னதாக, இந்த வன்முறைக்கு அரசி... மேலும் பார்க்க

காஸா விவகாரத்தில் இந்தியா மெளனம்: சோனியா காந்தி விமா்சனம்

சுதந்திரத்துக்காகவும், மனித கண்ணியத்துக்காகவும் ஓங்கி ஒலித்த இந்தியாவின் குரல், தற்போது காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் விவகாரத்தில் பெரும் மௌனம் காக்கிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ... மேலும் பார்க்க

செப். 29-இல் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி சிறப்பு முகாம்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சாா்பில் சிறப்பு முகாம் தமிழகத்தில் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் செப். 29 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து வருங்கால வைப்புநிதி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க