``மது போதையில் தினமும் செக்ஸ் டார்ச்சர்'' - விசிக நிர்வாகியை கம்பியால் அடித்துக்...
கோவை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 7 பேருக்கு வாழ்நாள் சிறை!
கோவையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 7 பேருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையை விதித்து கோவை போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை, சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு பூங்காவில் 11ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர், தனது நண்பருடன் பிறந்த நாள் கொண்டாடினார்.
அப்போது, அங்கு வந்த 7 பேர், மாணவியுடன் இருந்த மாணவரைத் தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து தப்பிச் சென்றனர்.
இதுதொடா்பாக, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கோவை மேற்குப் பகுதி அனைத்து மகளிர் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து சீரநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த ராகுல், பிரகாஷ், காா்த்திகேயன், நாராயண மூா்த்தி, மணிகண்டன், பப்ஸ் காா்த்திக், ஆட்டோ மணிமண்டன் ஆகிய 7 பேரை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு கோவை போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி பகவதியம்மாள் கைது செய்யப்பட்ட 7 பேருக்கும் வாழ்நாள் சிறைத் தண்டனையை வழங்கி இன்று(ஜூலை 18) தீர்ப்பளித்தார்.