செய்திகள் :

கோவை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 7 பேருக்கு வாழ்நாள் சிறை!

post image

கோவையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 7 பேருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையை விதித்து கோவை போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை, சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு பூங்காவில் 11ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர், தனது நண்பருடன் பிறந்த நாள் கொண்டாடினார்.

அப்போது, அங்கு வந்த 7 பேர், மாணவியுடன் இருந்த மாணவரைத் தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து தப்பிச் சென்றனர்.

இதுதொடா்பாக, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கோவை மேற்குப் பகுதி அனைத்து மகளிர் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து சீரநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த ராகுல், பிரகாஷ், காா்த்திகேயன், நாராயண மூா்த்தி, மணிகண்டன், பப்ஸ் காா்த்திக், ஆட்டோ மணிமண்டன் ஆகிய 7 பேரை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு கோவை போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி பகவதியம்மாள் கைது செய்யப்பட்ட 7 பேருக்கும் வாழ்நாள் சிறைத் தண்டனையை வழங்கி இன்று(ஜூலை 18) தீர்ப்பளித்தார்.

கம்யூனிஸ்ட் இயக்கம் மாசுபட்டு விடக்கூடாது: எடப்பாடி பழனிசாமி

கம்யூனிஸ்ட் இயக்கம் மாசுபட்டு விடக்கூடாது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

மின்சார வாகன தொழில்நுட்ப பயிற்சி! அறிய வாய்ப்பு!

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் 2 நாள் மின்சார வாகன தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

கொல்ல சதி செய்ததாகக் குற்றச்சாட்டு! மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனை முன் ஜாமீன்

இரு சமூகத்தினா் இடையே பகையைத் தூண்டும் வகையில் பேசியதாக மதுரை ஆதீனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், மதுரை முதன்மை அமர்வு அவருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளு... மேலும் பார்க்க

மக்களின் குறைகளை பொறுமையாக கேட்டு நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுரை!

மக்களுடைய குறைகளை பொறுமையாக கேட்டு, அவர்களுக்கு நியாயமான, நேர்மையான சேவையை விரைந்து வழங்கவேண்டும் என்று பயிற்சி முடித்த காவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.சென்னை, ஊனமாஞ்சேரி, தமிழ்நாடு... மேலும் பார்க்க

3 நாள்களுக்கு நீலகிரி, கோவைக்கு மிக கனமழை எச்சரிக்கை!

நீலகிரி, கோவை மாவட்டத்துக்கு 3 நாள்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தெற்கு ஆந்திர... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!

சென்னை: வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்து தவறான தகவல் அளித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.வேலூரைச் சேர்... மேலும் பார்க்க