செய்திகள் :

கோவை விமான நிலையத்தில் 500 கார்களை நிறுத்தும்வகையில் பார்க்கிங் மையம்!

post image

கோவை விமான நிலையத்தில் 524 கார்களை நிறுத்தும் வகையில் புதிய பார்க்கிங் மையம் அமைக்கப்பட இருக்கிறது.

கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் 30 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் 10,000 உள்நாட்டுப் பயணிகளும், 1,000 வெளிநாட்டுப் பயணிகளும் பயணம் செய்கிறார்கள்.

விமான நிலைய விரிவாக்கத்துக்காக ரூ. 1,100 கோடியில் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவுற்றது. இதைத் தொடர்ந்து ரூ. 2,000 கோடி மதிப்பில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய விமான நிலைய ஆணையரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்பொழுது ஓடுதளம் 2,900 மீட்டர் ஆக உள்ளது. இதனை மேலும் 450 மீட்டர் நீளத்துக்கு நீட்டிக்கவும் பயணிகளுக்கான அடிப்படை வசதி என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிகள் அனைத்தும் 2031 ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள பழைய குடியிருப்புப் பகுதிகளை அகற்றி, அங்கு கார் பார்க்கிங் வசதி மேற்கொள்ளப்பட உள்ளது. மொத்தம் 524 கார்களை நிறுத்தும் வகையில் பார்க்கிங் மையம் அமைக்க விமான நிலைய ஆணையரகம் ஒப்பந்தம் கோரியுள்ளது.

இந்தப் பணிகள் முடிவடைந்ததும், தற்பொழுது உள்ள பார்க்கிங் இடத்தில் சில மேம்பாட்டு நடவடிக்கைகள் நடைபெற உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து விமான நிலையப் பயணிகள் நலச் சங்கத்தினர் கூறும்போது, தற்பொழுது ஒரு மணி நேரத்துக்கு 4 விமானங்கள் கையாளப்பட்டு வருகிறது. தற்பொழுது இருக்கும் வசதியை கொண்டு மேலும் ஒரு டெர்மினல் கட்டடம் கட்டி ஒரு மணி நேரத்துக்கு கூடுதலாக 4 விமானங்களை கையாளும் வசதி செய்யப்பட வேண்டும். அப்பொழுதுதான் பயணிகளுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தவெக தொண்டா்களுக்கு விஜய் விடுத்துள்ள அதிரடி உத்தரவு!

நான் என் வேலையைப் பார்க்கச் செல்கிறேன், யாரும் என்னை பின்தொடர வேண்டாம் என்று மதுரை விமான நிலையத்தில் பல மணி நேரமாகக் காத்திருக்கும் தவெக தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ள விஜய், தொண்டா்களின் பாதுகாப்... மேலும் பார்க்க

திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள்தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள்தான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.உலக உழைப்பாளர்கள் நாளை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிபேட்டை மே நாள் பூங்காவில் உள்ள மே நாள் நினைவுச் சின்னத்திற்கு மு... மேலும் பார்க்க

எத்தகைய தொழில்நுட்பம் வந்தாலும் தமிழக இளைஞர்கள் தகவமைத்து கொள்வார்கள்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

சென்னை: ஏஐ உள்ளிட்ட எத்தகைய தொழில்நுட்பம் வந்தாலும் அதற்கேற்ப தமிழக இளைஞர்கள் தகவமைத்து கொள்வார்கள். இதுதான் மற்ற மாநிலத்திற்கு தமிழகத்திற்கு உள்ள வேறுபாடு என தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ... மேலும் பார்க்க

திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் ஆறுவழிச் சாலை பணி: துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்புதூர் வரையிலான 30.10 கி.மீ நீளத்துக்கான ஆறுவழிச் சாலை திட்டப்பணிகளை வியாழக்கிழமை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னை எல்லை சால... மேலும் பார்க்க

மதுரைக்கு வரும் விஜய், பேரணி நடத்தினால் நடவடிக்கை: காவல் ஆணையர் எச்சரிக்கை!

தவெக தலைவர் விஜய் இன்று மாலை மதுரை விமான நிலையம் வரவுள்ள நிலையில், இன்று காலை முதலே தொண்டர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் படப்பிடிப்புக்காக இன்று(வியாழக்கிழமை) கொடைக்கான... மேலும் பார்க்க

கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் அருகே சிலுவைபுரம் கிராம மக்கள், தங்களது பகுதியை தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரி கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏந்தி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடலூர... மேலும் பார்க்க