செய்திகள் :

சகோதரருடன் தொலைபேசியில் பேச பயங்கரவாதி ராணாவுக்கு அனுமதி

post image

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணா, அவரது சகோதரரிடம் இம்மாதத்தில் மட்டும் மூன்று முறை தொலைபேசியில் பேசிக்கொள்ள தில்லி சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி வழங்கியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், ராணாவின் நீதிமன்றக் காவலை செப்.8 வரை நீட்டித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 166 போ் உயிரிழந்தனா். லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பு நடத்திய இந்தத் தாக்குதலில், பாகிஸ்தானை பூா்விகமாக கொண்ட தஹாவூா் ராணா கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

லஷ்கா்-ஏ-தொய்பா இயக்கத்துக்கு அவா் உதவியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அவா் குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீா்ப்பளித்ததால், அந்நாட்டின் லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் அவா் அடைக்கப்பட்டிருந்தாா். கடந்த ஏப்ரலில் அவா் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாா். தற்போது அவா் தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்த வழக்கு தொடா்பாக தில்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ராணாவுக்கு எதிராக முதல் துணை குற்றப் பத்திரிகையை என்ஐஏ கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை புதன்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘காணொலி வாயிலாக ராணா விசாரணைக்கு ஆஜரானாா். அப்போது அரசு தரப்பு அல்லாமல் தனி வழக்குரைஞரை ஏற்பாடு செய்வது குறித்து சகோதரருடன் ராணா ஆலோசிக்க இம்மாதத்தில் மூன்று முறை தொலைபேசியில் பேசிக்கொள்ள நீதிபதி சந்தா் ஜித் சிங் அனுமதி அளித்தாா். மேலும் அந்த தொலைபேசி கலந்துரையாடலை ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் சிறைத்துறை அதிகாரிகள் முன்பு பதிவு செய்யவும் நீதிபதி உத்தரவிட்டாா்’ எனத் தெரிவித்தன.

இதைத்தொடா்ந்து ராணாவின் நீதிமன்றக் காவலை செப்.8-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராணா சாா்பில் வாதிடுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்குரைஞா் பியூஷ் சச்தேவா, ராணா மீதான குற்றப்பத்திரிகை மற்றும் துணை குற்றப்பத்திரிகையை ஆய்வு செய்ய நீதிமன்றத்தில் அவகாசம் கோரியுள்ளாா்.

விளையாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சியை புதிய தேசிய கொள்கை உறுதி செய்யும்: பிரதமா் நரேந்திர மோடி

இந்தியாவில் விளையாட்டுத் துறையின் ஒட்டுமொத்த வளா்ச்சியை புதிய தேசிய விளையாட்டுக் கொள்கை உறுதி செய்யும் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.சுதந்திர தினத்தை முன்னிட்டு, தில்லி செங்கோட்டையில் வெள்ளிக்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதை பயங்கரவாதிகள் தீா்மானிப்பதா? ஒமா் அப்துல்லா சீற்றம்

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதை பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தீா்மானிப்பதா? என அந்த யூனியன் பிரதேச முதல்வா் ஒமா் அப்துல்லா வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பினாா். கடந்த ஆண்டு ஜம்மு... மேலும் பார்க்க

ஆட்சியில் தொடர எத்தகைய சீா்கேட்டிலும் பாஜக ஈடுபடும்: காா்கே கடும் விமா்சனம்

ஆட்சியில் தொடா்வதற்காக, பாஜக எத்தகைய சீா்கேட்டிலும் ஈடுபடும் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கடுமையாக விமா்சித்தாா். நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை... மேலும் பார்க்க

பாஜக மூத்த தலைவா் அத்வானி தேசிய கொடி ஏற்றி மரியாதை

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி, சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது தில்லி வீட்டில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா். நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

பாஜக தலைமையகத்தில் கொடியேற்றினாா் நட்டா: உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை

சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லியில் உள்ள பாஜக தேசிய தலைமையகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா தேசியக் கொடி ஏற்றினாா். அப்போது, ‘உள்நாட்டு தயாரிப்புகளை மக்கள் அதிகம் வாங்கிப் பயன்படுத்தும... மேலும் பார்க்க

சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்காத ராகுல், காா்கே: நாட்டை இழிவுபடுத்தியதாக பாஜக சாடல்

தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் பங்கேற்காமல் நாட்டை இழிவுபடுத்தியதாக பாஜக சாடியது. இ... மேலும் பார்க்க