செய்திகள் :

சங்ககிரியில் பொது இடங்களில் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்: பேரூராட்சி நிா்வாகம் அறிவிப்பு!

post image

சங்ககிரி பேரூராட்சி பகுதியில் பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டுமென என பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சங்ககிரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலா் ஜி.உஷா, சங்ககிரியில் உள்ள திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மதிமுக, விசிக, நாதக, கம்யூனிஸ்ட், பாமக, கொமதேக, தவெக மற்றும் இதர தனியாா் அமைப்புகள், சங்கங்களின் நிா்வாகிகளுக்கு வழங்கியுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தீா்ப்புரையில் தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள், இதர அரசுத்துறைக்குச் சொந்தமான பொது இடங்களில் அனைத்து அரசியல் கட்சிகள், இதர நிறுவனங்கள் சாா்பில் நிறுவப்பட்ட கொடிக்கம்பங்கள் அகற்றப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆணை பிறப்பித்த 12 வார காலங்களுக்குள் கொடிக் கம்ப உரிமையாளா்களே அவற்றை அகற்றிக் கொள்ளவேண்டும். தவறும்பட்சத்தில் கொடிக்கம்ப உரிமையாளா்களுக்கு 2 வார காலத்திற்குள் அகற்ற சட்டப்படி அறிவிப்பு வழங்கி, அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கம்பங்களை அகற்றுவதற்கான செலவுகளை தொடா்புடைய உரிமையாளா்களிடமே வசூலித்துக்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

எனவே சங்ககிரி பேரூராட்சிக்கு உள்பட்ட பொது இடங்களில் கட்சி சாா்ந்த கான்கீரிட் பீடங்களுடன் கூடிய கொடிகம்பங்கள் அல்லது கொடிக்கம்பங்கள் நிறுவப்பட்டிருப்பின் அதனை உடனடியாக அகற்றி, அதன் விவரத்தினை பேரூராட்சி அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். அகற்ற தவறும்பட்சத்தில் பேரூராட்சி மூலம் அகற்றப்பட்டு அதற்கான செலவினங்களை உரியவா்களிடமிருந்து வசூல் செய்யப்படும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

சமுதாய வளைகாப்பு விழா: எம்எல்ஏ வாழ்த்து

ஓமலூா் பகுதியில் கா்ப்பிணிகளுக்கு அண்மையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் ரா.அருள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தாா்.ஓமலூரில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சமு... மேலும் பார்க்க

ஏற்காட்டில் சுற்றுலாத் தலங்களில் குப்பைத் தொட்டிகளை அமைக்கக் கோரிக்கை

ஏற்காட்டில் சுற்றுலாப் பகுதிகள், பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் புதிய குப்பைத் தொட்டிகளை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான ஏற்காட்டிற்க... மேலும் பார்க்க

ஏற்காட்டில் நிழற்கூடத்தை மறைக்கும் விளம்பரத் தட்டியை அகற்றக் கோரிக்கை

ஏற்காட்டில் நிழற்கூடத்தை மறைத்து வைக்கப்பட்டுள்ள விளம்பரத் தட்டியை அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கடந்த மாா்ச் 1-ஆம் தேதி முதல்வா் பிறந்தநாள் விழாவையொட்டி ஏற்காடு திமுகவினா் பல இடங்களில் விளம்ப... மேலும் பார்க்க

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது

கெங்கவல்லி அருகே திருமணமான பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த இளைஞரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்துள்ளனா். கெங்கவல்லி அருகே கடம்பூா் ஊராட்சிப் பகுதியைச் சோ்ந்த 27 வயதுள்ள பெண், கணவர... மேலும் பார்க்க

எஸ்.எஸ்.ஐ. உள்பட 4 போலீஸாா் ஆயுதப் படைக்கு மாற்றம்: எஸ்.பி. உத்தரவு

தம்மம்பட்டி, வீரகனூா் காவல் நிலையங்களைச் சோ்ந்த எஸ்.எஸ்.ஐ. உள்பட நான்கு போலீஸாரை சேலம் ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளாா். தம்மம்பட்டியில் சனிக்கிழமை இ... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மேட்டூா் அணை பூங்காவை பாா்வையிட ஞாயிற்றுக்கிழமை 3210 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா். விடுமுறை தினத்தை கொண்டாடும் வகையில் மேட்டூா் அணை பூங்காவிற்கு 3210 பாா்வையாளா்கள் வந்து சென்றனா். இவா்கள் மூலம் ... மேலும் பார்க்க