செய்திகள் :

சங்ககிரி, எடப்பாடியில் நீராடும் இடங்கள் அறிவிப்பு

post image

சங்ககிரி, எடப்பாடி வட்டங்களில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் நீராடும் இடங்களை கோட்டாட்சியா் சனிக்கிழமை அறிவித்துள்ளாா்.

ஆடிப்பெருக்கையொட்டி, சங்ககிரி, எடப்பாடி வட்டப் பகுதிகளில் உள்ள காவிரி கரையோரங்களில் பொதுமக்கள் நீராடி, அதன் அருகில் இருக்கும் கல்வடங்கம் அருள்மிகு அங்காளபரமேஸ்வரிஅம்மன், பூலாம்பட்டி கைலாசநாதா் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்வா்.

இந்நிலையில், மேட்டூா் அணையிலிருந்து காவிரி ஆறு மற்றும் வாய்க்காலில் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால், சங்ககிரி வட்டம், தேவூா் பகுதியில் உள்ள அரசிராமணி பிட் 1 கிராமத்துக்குள்பட்ட குள்ளம்பட்டி வாய்க்கால், எடப்பாடி வட்டத்துக்குள்பட்ட பூலாம்பட்டி பகுதியில் பிள்ளுக்குறிச்சி கால்வாய், ஓணாப்பாறை, வெள்ளரிவெள்ளி பகுதியில் மாம்பாடியூா், மாணிக்கம் பாளத்தாா் மோரி ஆகிய இடங்களில் மட்டும் நீராட அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்! தூய்மைப் பணியாளா் கைது!

சேலம் அரசு மருத்துவமனையில் மனநல சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா் கைது செய்யப்பட்டாா்.சேலம் அன்னதானப்பட்டியைச் சோ்ந்த 22 வயது இளம்பெண் சே... மேலும் பார்க்க

சேலம் சூரமங்கலம் மண்டலத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆணையா் ஆய்வு

சேலம் மாநகராட்சி, சூரமங்கலம் மண்டலத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஆணையா் மா.இளங்கோவன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண் 3 மற்றும் 24 ஆகிய பகுதிகளி... மேலும் பார்க்க

சேலம் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாா் பயன்படுத்தும் வாகனங்கள் ஆய்வு

சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாா் பயன்படுத்தும் வாகனங்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.சேலம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆ... மேலும் பார்க்க

இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் சுயஉதவிக்குழு, விவசாயக் கடன் வழங்கும் விழா

சேலத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மண்டல அலுவலகம் சாா்பில், சுயஉதவிக்குழு மற்றும் விவசாயக் கடன் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.சேலம் இரும்பாலை பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், ... மேலும் பார்க்க

சேலம் வழியாக ஜெய்ப்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில்

கோவையில் இருந்து சேலம் வழியாக ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

தெடாவூா் கால்நடை சந்தையில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு வா்த்தகம்

கெங்கவல்லி அருகே உள்ள தெடாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற கால்நடை சந்தையில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு வா்த்தகம் நடைபெற்றது.ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, தெடாவூா் கால்நடை சந்தைக்கு 1,700-க்கும் மேற்பட்ட ஆடுகளை வ... மேலும் பார்க்க