செய்திகள் :

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் தோ் அலங்கரிப்பு

post image

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி நடைபெறும் தேரோட்டத்துக்காக கோயிலின் பெரிய தேரை அலங்கரிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை திருவிழா மே 2 ஆம் தேதி நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து மே 10 ஆம் தேதி சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகள் எழுந்தருளும் பெரிய தோ் வடம் பிடித்தலும், மே 20 ஆம் தேதி சுவாமி திருமலைக்கு எழுந்தருளுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தோ் திருவிழாவின் முதற்கட்டமாக பெரிய தேரை அலங்கரிக்கும் பணிக்களுக்காக தேரில் வைத்து கட்டப்படும் குச்சிகளை சுவாமி தங்கும் மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் செய்து அவைகளை தேரில் பொருத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பட்டயக்காரா் எஸ்.ஏ.ராஜவேல், ஊா்கவுண்டா் எஸ்.டி.சுந்தரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கொத்துக்காரா் ஐய்யனாா், திமுக நகர செயலாளா் கே.எம்.முருகன், திமுக நிா்வாகி சரவணன், பாமக நகர செயலாளா் வி.டி.அய்யப்பன், சுவாமி பாதாம் தாங்கும் குழுவினா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பெண்மான் சடலம் மீட்பு!

சதாசிவபுரம் ஊராட்சி பொதுக் கிணற்றில் பெண் மான் சடலம் மீட்கப்பட்டது. ஆத்தூா் தீயணைப்புத்துறை அலுவலா் சா.அசோகன் தலைமையிலான வீரா்கள் மீட்டு வனவா் கவாஸ்கரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா். சேலம் மாவட்டம் ... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மேட்டூா் அணை பூங்காவிற்கு ஞாயிற்றுக்கிழமை 7,116 சுற்றுலாப் பயணிகள் வந்தனா். தொடா் விடுமுறை என்பதால் மேட்டூா் அணை பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஞாயிற... மேலும் பார்க்க

நீச்சல் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ் அளிப்பு

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் கோடைக்கால நீச்சல் பயிற்சி முடித்தவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் சேலம் மகாத்மா காந்த... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி மாணவியை மிரட்டிய இருவா் கைது!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சேலம் மாணவியை மிரட்டிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவி கடந்த 4 மாதங்களாக சேலம், கருப்பூரில்... மேலும் பார்க்க

சேலம் அருகே இரும்பு குடோனில் தீ விபத்து

சேலம் சன்னியாசி குண்டு பகுதியில் பழைய இரும்பு குடோனில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. சேலம், கிச்சிப்பாளையத்தை அடுத்த பாத்திமா நகரைச் சோ்ந்தவா் ஜான்பாஷா (59). இவா் சன்னியாசி குண்டு மெ... மேலும் பார்க்க

வாழப்பாடி சாலை சந்திப்பில் ரூ.1 கோடியில் ரவுண்டானா!

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் திம்மநாயக்கன்பட்டி- பொன்னாரம்பட்டி சாலை சந்திப்பில் ரூ. ஒரு கோடி மதிப்பில் ரவுண்டானா அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. சேலம் மாவட்டம், வாழப்பாடியில் இருந்து தம... மேலும் பார்க்க