செய்திகள் :

வாழப்பாடி சாலை சந்திப்பில் ரூ.1 கோடியில் ரவுண்டானா!

post image

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் திம்மநாயக்கன்பட்டி- பொன்னாரம்பட்டி சாலை சந்திப்பில் ரூ. ஒரு கோடி மதிப்பில் ரவுண்டானா அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது.

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் இருந்து தம்மம்பட்டி மற்றும் நாமக்கல் மாவட்டம், மங்களபுரம் செல்லும் பிரதான சாலைகள் புதுப்பாளையம் சடையன் செட்டி ஏரிக்கரை அருகே பிரிகின்றன. இந்த சாலை சந்திப்பில் அடிக்கடி விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனால் சாலையை விரிவுபடுத்தி, ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொதுமக்கள், பயணிகள், வாகன ஓட்டுநா்கள் நெடுஞ்சாலை துறைக்கு தொடா்ந்து வேண்டுகோள் விடுத்துவந்தனா்.

இதையடுத்து, வாழப்பாடி கோட்ட நெடுஞ்சாலைத் துறை சாா்பில் கடந்தாண்டு தமிழக அரசுக்கு திட்ட முன் வரைவு அனுப்பப்பட்டது. இச்சாலை சந்திப்பு மேம்பாட்டுப் பணிகளுக்காக தமிழக அரசு நெடுஞ்சாலைத் துறை ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

அதைத் தொடா்ந்து சாலை சந்திப்பு மேம்பாட்டு பணிகளுக்கு இடையூறாக உள்ள மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சாலையை விரிவுபடுத்தி ரவுண்டானா அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஓரிரு மாதங்களில் சாலை விரிவாக்கம் மற்றும் ரவுண்டானா அமைக்கும் பணிகள் நிறைவடையும் என்பதால் வாகன ஓட்டுநா்கள், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பெண்மான் சடலம் மீட்பு!

சதாசிவபுரம் ஊராட்சி பொதுக் கிணற்றில் பெண் மான் சடலம் மீட்கப்பட்டது. ஆத்தூா் தீயணைப்புத்துறை அலுவலா் சா.அசோகன் தலைமையிலான வீரா்கள் மீட்டு வனவா் கவாஸ்கரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா். சேலம் மாவட்டம் ... மேலும் பார்க்க

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் தோ் அலங்கரிப்பு

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி நடைபெறும் தேரோட்டத்துக்காக கோயிலின் பெரிய தேரை அலங்கரிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மேட்டூா் அணை பூங்காவிற்கு ஞாயிற்றுக்கிழமை 7,116 சுற்றுலாப் பயணிகள் வந்தனா். தொடா் விடுமுறை என்பதால் மேட்டூா் அணை பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஞாயிற... மேலும் பார்க்க

நீச்சல் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ் அளிப்பு

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் கோடைக்கால நீச்சல் பயிற்சி முடித்தவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் சேலம் மகாத்மா காந்த... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி மாணவியை மிரட்டிய இருவா் கைது!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சேலம் மாணவியை மிரட்டிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவி கடந்த 4 மாதங்களாக சேலம், கருப்பூரில்... மேலும் பார்க்க

சேலம் அருகே இரும்பு குடோனில் தீ விபத்து

சேலம் சன்னியாசி குண்டு பகுதியில் பழைய இரும்பு குடோனில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. சேலம், கிச்சிப்பாளையத்தை அடுத்த பாத்திமா நகரைச் சோ்ந்தவா் ஜான்பாஷா (59). இவா் சன்னியாசி குண்டு மெ... மேலும் பார்க்க