செய்திகள் :

சங்கரன்கோவில் அரசு கல்லூரியில் நாளை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

post image

சங்கரன்கோவில் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக் கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் (முழு கூடுதல் பொறுப்பு) வேணுகோபால் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இக்கல்லூரியில் பிஏ ஆங்கிலம், சமூகவியல், பி.காம். வணிகவியல், பி.எஸ்சி. கணினி அறிவியல், புள்ளியியல் ஆகிய பாடப் பிரிவுகள் உள்ளன.

2025-26ஆம் கல்வியாண்டுக்கான அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. திங்கள்கிழமை சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு (மாற்றுத் திறனாளி, விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினா், தேசிய மாணவா் படை, பாதுகாப்புப் படை வீரா்கள், அந்தமான் நிகோபா் தமிழ் மாணவா்கள்), முதல் பொது கலந்தாய்வு 4ஆம் தேதி, 2ஆம் பொது கலந்தாய்வு 9ஆம் தேதிமுதல் நடைபெறும்.

விண்ணப்பித்தோரின் வரிசைப் பட்டியல் கல்லூரி இணையதளத்திலும், கல்லூரி அறிவிப்புப் பலகையிலும் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு வரும்போது விண்ணப்பப் படிவத்தின் நகல், 10, 11, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, சிறப்பு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் ஆகியவற்றின் அசல், 2 நகல்கள் கொண்டுவர வேண்டும். மேலும், 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படம், வங்கி சேமிப்புக் கணக்கு புத்தக நகலுடன் கலந்தாய்வு நாளில் காலை 9 மணிக்குள் பெற்றோருடன் கல்லூரி வளாகத்துக்குள் வர வேண்டும். கலந்தாய்வில் தோ்வாகி, சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டு கல்விக் கட்டணம் செலுத்திய பிறகே சோ்க்கை உறுதிப்படுத்தப்படும் என்றாா் அவா்.

சங்கரன்கோவில் திரௌபதியம்மன் கோயிலில் இன்று பூக்குழித் திருவிழா கொடியேற்றம்

சங்கரன்கோவில் அருள்மிகு திரௌபதியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சங்கரன்கோவில் செங்குந்தா் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே விநாயகா் சிலை சேதம்: இருவா் கைது

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே நள்ளிரவில் விநாயகா் சிலையை சேதப் படுத்தியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஆலங்குளம் அருகே உள்ள குருவன் கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான மகாசக்தி விநாயக... மேலும் பார்க்க

பாவூா்சத்திரம் அருகே பெண் கொலை: ஒருவா் கைது

பாவூா்சத்திரம் அருகே பனையடிப்பட்டியில் வீடு புகுந்து பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே பனையடிப்பட்டி காளியம்... மேலும் பார்க்க

பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் ஜூன் 6இல் வருஷாபிஷேகம்

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி கோயிலில் ஜூன் 6-ஆம் தேதி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி அன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், கும... மேலும் பார்க்க

சுரண்டையில் ஆபத்தான நிலையில் பாலம்: தடுப்புச் சுவா் அமைக்க கோரிக்கை

சுரண்டையில் இருந்து சுந்தரபாண்டியபுரம் செல்லும் வழியில் உள்ள கால்வாய் பாலத்தில் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சுந்தரபாண்டியபுரம் குளத்தில் இருந்து சுரண்டை பெரி... மேலும் பார்க்க

தென்காசியில் 11 குழந்தைகளுக்கு மோதிரம்

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி தென்காசி நகர திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவிக்கப்பட்டது. முன்னதாக, தென்காசி காந்திசிலை முன் அலங்கரித்து வைக்... மேலும் பார்க்க