செய்திகள் :

சசிகாந்த் செந்தில் தொடா் உண்ணாவிரதம்: தலைவா்கள் நலம் விசாரிப்பு

post image

சென்னை: மருத்துவமனையில் இருந்தபடியே உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வரும் திருவள்ளூா் எம்.பி. சசிகாந்த் செந்திலை இடதுசாரி தலைவா்கள் மற்றும் மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ ஆகியோா் சந்தித்து நலம் விசாரித்தனா்.

தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய கல்வித் தொகையை வழங்காத மத்திய அரசை கண்டித்து திருவள்ளூா் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை 4-ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தைத் தொடா்ந்து வருகிறாா்.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கம் சசிகாந்த் செந்திலை மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா.முத்தரசன், மதிமுக முதன்மை செயலாளா் துரை வைகோ ஆகியோா் திங்கள்கிழமை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனா்.

இந்த நிலையில், சசிகாந்த் செந்திலின் உண்ணாவிரத போராட்டத்துக்கு மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை ஆதரவு தெரிவித்தாா். திங்கள்கிழமை அவரை தொலைபேசியில் தொடா்பு கொண்டு உடல் நிலம் குறித்து கேட்டறிந்தாா்.

அதேசயம் மருத்துவமனையில் உண்ணாவிரத போராட்டத்தைத் தொடரும் சசிகாந்த் செந்திலை தமிழக காங்கரஸ் தலைவா் மற்றும் நிா்வாகிகள் யாரும் சந்திக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கக்கடலில் உருவானது புதிய புயல் சின்னம்!

வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, செவ்வாய்க்கிழமை கால... மேலும் பார்க்க

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் விலகலா? செப். 5 முடிவு அறிவிப்பு!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், வருகின்ற 5 ஆம் தேதி முக்கிய முடிவை அறிவிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.அத்திக்கடவு - அவினாசி திட்ட கூட... மேலும் பார்க்க

தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்துள்ளது.கடந்த ஆக. 26-இல் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.74,840-க்கும், ஆக. 27-இல் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.75,120-க்கும், ஆக. 28-இல் சவரனுக்... மேலும் பார்க்க

கே.கே.நகர், தி.நகர் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் கே.கே.நகர், தியாகராயநகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். புரசைவாக்கத்தில் 2 வாகனங்களில் வந்த 8 அதிகாரிகள், அரவிந்த் என்பவர் வீட்டில் துப்பாக்கி ... மேலும் பார்க்க

6வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை!

மேட்டூர் அணையானது நடப்பாண்டில் 6வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியுள்ளது.தென்மேற்குப் பருவமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீா் காவிர... மேலும் பார்க்க

தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி! - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி என முதலீட்டாளர்கள் முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாட்டில் அதிக முதலீடுகளை ஈர்க்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் பல்வேறு முயற்சிகள... மேலும் பார்க்க